சென்னை, ஏப். 23 - மக்களவைத் தேர்தல் தேதி அறி விப்பு கடந்த மார்ச் 16 அன்று வெளியான தைத் தொடர்ந்து, தமிழகத்தின் தலை மைச் செயலகம் உள்ளிட்ட அனைத்து அரசு அலுவலகங்களும் தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டன. இதனால் முத லமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மக்களவை உறுப்பினர் கள் அலுவலகங்கள் அனைத்தும் பூட்டப் பட்டு, அவற்றின் சாவிகள் தேர்தல் அதிகாரியிடம் ஒப்படைக்கப்பட்டது.
ஏப்ரல் 19 அன்று நடைபெற்ற தேர்த லுக்காக முதல்வரும், திமுக தலைவரு மான மு.க. ஸ்டாலின், ‘இந்தியா’ கூட் டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உட்பட 40 தொகுதிகளுக்கும் சென்று சூறாவளி பரப்புரை மேற்கொண்டார். தற்போது, தேர்தல் முடிந்துவிட்ட நிலையில், முத லமைச்சர் மு.க. ஸ்டாலின் செவ்வாய்க் கிழமை (ஏப்ரல் 23) தலைமைச் செயலகம் வருகை தந்தார்.