tamilnadu

img

சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம்  

முகக்கவசம் அணியவில்லை எனக்கூறி சட்டக்கல்லூரி மாணவரை தாக்கிய விவகாரத்தில் 2 காவலர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.  

சென்னை கொடுங்கையூரில் சட்டக்கல்லூரி மாணவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் 2 போலீசார் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். முககவசம் அணிவது தொடர்பாக எழுந்த வாக்குவாதத்தில் சட்டக்கல்லூரி மாணவர் அப்துல் ரஹீமை கொடுங்கையூர் காவல் நிலைய போலீசார் கொடூரமாக தாக்கியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்தநிலையில் தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமாரனை பணியிடைநீக்கம் செய்து இணை ஆணையர் ராஜேஸ்வரி உத்தரவிட்டார்.  

முன்னதாக,  குற்றச்சாட்டுக்கு உள்ளான  தலைமைக் காவலர் பூமிநாதன், காவலர் உத்திரகுமார் ஆகிய இருவரும் காவல் கட்டுப்பாட்டு அறைக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டனர்.