சென்னை, பிப்.28- சட்டவிரோத பணபரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட முன் னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கடந்த 8 மாதங்க ளாக சிறையில் உள்ளார். இந்நிலையில் செந்தில் பாலாஜி தரப்பில் ஜாமீன் கோரி 2-ஆவது முறையாக வழக்கறிஞர் என். பரணிகுமார் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார். பிப்ரவரி 14, 15, 21 தேதிகளில் மூத்த வழக்கறிஞர் அரிமா சுந்தரம் ஆஜராகி வாதாடினார்.
“அமலாக்கத் துறை முன்வைத்த ஆதாரங்களில் முன்னுக்கு பின் முரண்பாடுகள் உள்ளன. செந்தில் பாலாஜி வீட்டில் கைப்பற்றியதாக கூறிய ஆதாரங்களை தற்போது மாநகர போக்குவரத்து கழக அலுவலகத்தில் இருந்து பெற்றதாக தெரிவிக்கின்றனர். வேலை வாங் கித் தருவதாக 67 கோடி ரூபாய் வசூலித்து மோசடி செய்த தாக அமலாக்கத்துறை கூறும் குற்றச்சாட்டுக்களுக்கு ஆதாரங்கள் இல்லை. புலன் விசாரணை முடிந்து விட்ட தாக அமலாக்கத் துறையினரே கூறுகின்றனர். செந்தில் பாலாஜி தற்போது அமைச்சராகவும் இல்லை. எனவே, நீண்டகாலம் சிறையில் உள்ள அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என்று அவர் கூறினார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் பிப்ரவரி 28 - புதனன்று தீர்ப்பு வழங்கினார். அப்போது, செந்தில் பாலாஜியின் ஜாமீன் மனுவை அவர் 2-ஆவது முறையாக தள்ளுபடி செய்து உத்தரவிட்டார். மேலும் செந்தில் பாலாஜி 8 மாதங்க ளாக சிறையில் இருப்பதால் வழக்கு விசாரணை 3 மாதத்தில் நடத்தி முடிக்கவும் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.