கடலூர் குறைதீர் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்
கடலூர், நவ. 22- பக்கிங்காம் கால்வாய் திட்டத்தை நிறைவேற்ற வேண்டுமென விவ சாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு மற்றும் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவல கத்தில் ஆட்சியர் வெ.அன்புச்செல் வன் தலைமையில் வெள்ளிக் கிழமை நடைபெற்றது. மாவட்ட வரு வாய் அலுவலர் இரா.ராஜகிரு பாகரன், வேளாண்மை இணை இயக்குநர் ஜி.ஆர்.முருகன், ஆட்சிய ரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) மாரியப்பன், உதவி இயக்குநர் சு.பூவராகன், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் பா.ரேணுகாம்பாள், முன்னோடி வங்கி மேலாளர் பி.ஜோதிமணி, கால் நடைத்துறை இணை இயக்குநர் கே.குபேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் விவசாயிகள் பேசிய வது வருமாறு: பேரூர் காமராஜ்: காவாலக்குடி-நந்தீஸ்வரமங்கலம் வரையில் குண்ட பண்டிதன் ஓடையை தூர்வார வேண்டும்.
பாசிமுத்தான் ஓடை பாசன விவ சாயிகள் சங்கத் தலைவர் பெ. ரவீந்திரன்: வடகிழக்கு பருவமழை சராசரி அளவை விட குறைவாகவே பெய்துள்ளதால் வேளாண்மை, குடி நீர் தேவையை கருத்தில் கொண்டு தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். விளைபொருட்களுக்கு அரசால் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதார விலை கிடைப்பதை உறுதி படுத்த வேண்டும். அடிக்கடி இயற்கை பாதிப்புக்கு உள்ளாகும் கடலூர் மாவட்டத்தில் மழைநீர் விரைந்து வடி யவும், கடல்நீர் உட்புகுவதை தடுக்க வும் ரூ.95 கோடியில் அருவாமூக்குத் திட்டம், வெள்ளாற்றில் கெடிலத்தில் ரூ.19 கோடியில் தடுப்பணை, கொள்ளிடத்தில் ரூ.56 கோடியில் தடுப்பணை கட்டவும் அரசு பரி சீலனையில் இருந்து வருகிறது. இதற்கு நிரந்தர தீர்வாக பக்கிங் காம் கால்வாய் திட்டத்தை நிறை வேற்றினால் தண்ணீர் சேமிப்பும், கடல் நீர் உட்புகுவதையும் தடுக்க முடியும்.
தமிழ்நாடு விவசாயிகள் சங்கச் செயலாளர் கோ.மாதவன்: பெரு மாள் ஏரியை என்எல்சி நிதி மூலமாக தூர்வார வேண்டும். பூவாணிக்குப் பத்தில் பாசன வாய்க்கால் இடிந்த தால் ஆயிரம் ஏக்கர் பாதிக்கப் பட்டுள்ளது. செந்தில்குமார்: காட்டு விலங்கு களால் உளுந்து, மக்காச்சோளம் ஆகிய பயிர்கள் சேதமாகி வருவ தைத் தடுக்க வேண்டும். காந்தி: திருத்துறையூர் ஏரியில் 1 கி.மீ தூரத்திற்குள்ள ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். ராமலிங்கம்: அயன்குறிஞ்சிப் பாடி அருகே தாழவாய்க்கால் ஆக்கிர மிப்புகளை அகற்ற வேண்டும். பூவாலை இரா.தமிழ்வளவன்: 2016 ஆம் ஆண்டில் பயிர்க்காப்பீடு செய் கடன் பெறாத விவசாயி களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், பூவாலை-குண்டியமல்லூர் இடையே பரவனாற்றில் 4 ஆண்டு களாக கட்டப்பட்டு வரும் உயர்மட்ட பாலப்பணியை துரிதப்படுத்த வேண்டும். ராமானுஜம்: விஸ்வநாதபுரம் தென்பெண்ணையாற்றில் தடுப் பணை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு கோரிக்கைகள் வைத்த னர்.