tamilnadu

img

கால்வாயில் மீட்கப்பட்ட சிறுமியின் உடல் - தனிப்படை காவல்துறையினர் தீவிர விசாரணை 

மயிலாடுதுறை அருகே கால்வாயில் சிறுமி உயிரிழந்து கிடந்த சம்பவம் குறித்து தனிப்படை காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அடுத்த வில்லிய நல்லூரில் 13 வயது சிறுமி கடந்த 7 ஆம் தேதி தன் மாமா வீட்டிற்குச் செல்வதாகக் கூறிவிட்டுச் சென்றுள்ளார். இதனைத் தொடர்ந்து, சிறுமி கால்வாயில் பிணமாக மீட்கப்பட்டார். இந்நிலையில், சிறுமியின் மரணம் குறித்து விசாரிக்கக் கோரி சிறுமியின் உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதை அடுத்து, தனிப்படை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கால்வாயில் கிடந்த சிறுமியின் உடலை உறவினர்களே மீட்டதால் தடயங்கள் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 

 

;