court

img

மிக முக்கிய வழக்குகள் மட்டுமே விசாரணை: உயர்நீதிமன்றம்....

சென்னை:
உயர்நீதிமன்றத்தில் ஜூன் 1 முதல் 11 ஆம் தேதி வரையில் 9 நீதிபதிகள் மட்டுமே வழக்குகளை விசாரிப்பார்கள் சென்னை உயர் நீதிமன்ற நீதித்துறை பதிவாளர் எம்.என்.செந்தில் குமார் அறிவித்துள்ளார்.

கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக ஜூன் 1 முதல் 11ஆம் தேதி வரையிலான சிறப்பு அமர்வுகளை சென்னை உயர்நீதிமன்றம் அறிவித்துள்ளது.மிக முக்கிய வழக்காக தாக்கல் செய்யப்படும் வழக்குகளை மட்டுமே விசாரிக்க ஜூன் 1 முதல் 11 தேதி வரை சிறப்பு அமர்வுகள் அமைக்கப்பட்டுள்ளது.அனைத்து நாட்களிலும் தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு செயல்படும். அதைத்தவிர சென்னையில் ஜூன் 1 முதல் 3 தேதி வரை, 4 முதல் 8 தேதி வரை, 9 முதல் 11 தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள்.இரு நீதிபதிகள் கொண்ட 2 அமர்வுகள் தனி நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்ற வகையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.

மதுரை
மதுரையில் ஜூன் 1 முதல் 7 தேதி வரை, 8 முதல் 11 தேதி வரை தலா 7 நீதிபதிகள் வழக்குகளை விசாரிப்பார்கள். இரு நீதிபதிகள் கொண்ட 2 அமர்வுகள் தனி நீதிபதி கொண்ட 3 அமர்வுகள் என்ற வகையில் வழக்குகள் விசாரிக்கப்படும்.

ஜாமீன் மனு விதிகள்
ஏற்கனவே ஜாமீன் மனு தள்ளுபடி ஆகியிருந்தால் அதே நீதிபதி முன்புதான் மீண்டும் ஜாமீன் மனுக்கள் தாக்கல் செய்யப்பட வேண் டும். ஜாமீன் ரத்து கோரி தாக் கல் செய்யப்படும் மனுக்களும் ஏற்கனவே ஜாமீன் வழங் கிய நீதிபதி முன்பாகத்தான் தாக்கல் செய்யப்பட வேண்டும்.

;