tamilnadu

img

நெய்வேலியில் மண் வளம் பாதிப்பா ஆய்வுக்கு குழு அமைத்தது வாரியம்

சென்னை, ஆக.29-

      நிலக்கரி சுரங்கங்களால், நெய்வேலியில் மண் வளம் பாதிக்கப் பட்டு உள்ளதா என்பது குறித்து ஆய்வு செய்ய, ஐந்து பேர் அடங்கிய  வல்லுனர் குழுவை நியமித்து, மாசு  கட்டுப்பாடு வாரியம் உத்தரவிட் டுள்ளது.

    கடலுார் மாவட்டம், நெய்வேலியில், என்.எல்.சி., நிறுவனம் சார்பில், நிலக் கரி சுரங்கங்கள் உள்ளன. இதில், சில இடங்களில் விரிவாக்க திட்டங்களும் மேற்கொள்ளப்படுகின்றன. இத்திட்டங்களால் நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் நிலம், நீர்வளம் பாதிக்கப்படுவதாக புகார் எழுந்தது.

    இது தொடர்பாக தானாக முன்வந்து விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், இதுகுறித்து ஆராய வல்லு னர் குழுவை அமைக்க உத்தரவிட்டது. இந்த உத்தரவு அடிப்படையில், தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் பிறப்பித்துள்ள உத்தரவு வருமாறு:

     பசுமை தீர்ப்பாய உத்தரவுப்படி, நெய்வேலி, பரங்கிப்பேட்டையில் நிலம், நீர் வளம் பாதிக்கப்பட்டுள்ளதா என்று ஆராய முடிவானது. இதற்காக  பல்வேறு இடங்களில் மாதிரிகளை சேகரித்து, முறையாக ஆய்வு செய்து  அறிக்கை அளிக்க, ஐந்து பேர் அடங்கிய  வல்லுனர் குழு நியமிக்கப்படுகிறது.பசுமை தீர்ப்பாயத்தில் இந்த வழக்கு, அடுத்த விசாரணைக்கு வரும் முன், இவர்கள் ஆய்வறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும்.

     இவ்வாறு மாசு கட்டுப்பாடு வாரிய  உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

யார், யார்?

     மாசு கட்டுப்பாடு வாரியத்தின் கூடுதல் தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் ஆர்.ராஜமாணிக்கம், இணை தலைமை சுற்றுச்சூழல் பொறி யாளர் ஏ.சாம்யுல் ராஜ்குமார், கடலுார்  மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் உமைய குஞ்சரம், ஆய்வக நிறுவன உதவி இயக்குநர்கள் சங்கர சுப்ரமணியன், டி.சித்ரராசு ஆகியோர் குழுவில் இடம் பெற்றுள்ளனர்.