தொகுதி பங்கீடு ஒப்பந்தம் மார்ச் 3 ஆம் தேதிக்கு பிறகு கையெ ழுத்தாகும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர் கே.சுப்பராயன் எம்.பி., தெரிவித்தார்.
திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு, முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு, துணைப் பொதுச் செயலாளர்கள் ஐ.பெரியசாமி, க.பொன்முடி, உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் திருச்சி சிவா எம்.பி., எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆகியோர் கொண்ட குழுவுடன் திங்களன்று (பிப்.26) அறிவாலயத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில துணைச் செயலாளர்கள் கே.சுப்பராயன் எம்.பி., மு.வீரபாண்டியன், மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் ஜி.பழனிச்சாமி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தி னர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சுப்பராயன், “இரண் டாவது கட்ட பேச்சுவார்த்தை மிகமிக சுமூகமாக நடைபெற்றது. மார்ச் 3 ஆம் தேதிக்கு பிறகு இறுதி கட்ட ஒப்பந்தம் நிறைவேறும்” என்றார். முதல் கட்ட பேச்சுவார்த்தையில் பட்டியல் கொடுத்தோம். ஏற்கனவே கூட்டணியில் வெற்றி பெற்ற திருப்பூர், நாகப்பட்டினம் ஆகிய தொகுதிகளோடு கூடுதலாக ஒரு தொகுதி கேட்டுள்ளோம் என்றும் அவர் கூறினார்.