சென்னை, மார்ச் 12- பால் பாக்கெட்டுகள் தயாரித்து கையாளும் தானியியங்கி எந்திரம் நிறுவ நபார்டு வங்கியிடம் கடன் பெற ஒப்புதல் கிடைத்துள்ளது. இணையம் மற்றும் மாவட்ட ஒன்றியங்களில் பால் பாக்கெட்டுகள் தயா ரித்து கையாளும் தானி யங்கி இயந்திரம் நிறுவும் பணிகளை ரூ.30 கோடி நபார்டு வங்கியின் கடன் உதவியுடன் நிறுவுவதற் கான நிர்வாக ஒப்புதல் அளித்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
நுகர்வோருக்கு சரியான நேரத்தில் பால் பாக்கெட்டு களை கொண்டு சேர்ப்ப தற்கு மற்றும் பால் பாக் கெட்டுகளை உற்பத்தி செய்து அவற்றை அடுக்கி வைப்பதற்கு தேவைப்படும் மனிதவளத்தை குறைப் பதற்கும் சோழிங்கநல்லூர், மாதவரம் மற்றும் அம்பத் தூர் ஆகிய இணைய பால் பண்ணைகளில் கோயம் புத்தூர், சேலம், மதுரை மற்றும் திருச்சி ஆகிய மாவட்ட ஒன்றிய பால் பண்ணைகளில் தானியங்கி பால் கையாளும் இயந்தி ரத்தை நிறுவுவது இத்திட் த்தின் நோக்கமாகும்.
இத்திட் டத்தினால் உரிய நேரத்தில் நுகர்வோர்களுக்கு பால் விநியோகிப்பதால், நேர விரயம் தவிர்க்கப்படுகிறது.