ஆந்திர மாநிலம் விசாகப்பட்டி னம் துறைமுக ஆணையத் துக்கு அடுத்துள்ள மீன்பிடி துறைமுகத்தில் திங்களன்று அதி காலை 12.30 மணிக்கு ஏற்பட்ட தீ விபத் தில் சுமார் 25 விசைப் படகுகள் தீயில் கருகி சேதமடைந்தன. இந்த விபத்தில் உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை என்றாலும், சேதமடைந்த படகுகள் ஒவ் வொன்றும் ரூ.40 லட்சம் மதிப்புடையது என்ற நிலையில், ரூ.15 கோடி வரை பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது.
தீ விபத்துக்கான காரணம் இன்னும் கண்டறியப்படவில்லை என்றாலும் தீ விபத்துக்குள்ளான படகு ஒன்றில் மது விருந்து நடந்ததாகவும், அதில் இரு குழுக்களுக்கு இடையே சலசலப்பு ஏற் பட்டு மது சிந்தியதால் தீ விபத்து ஏற் பட்டதாகவும் முதற்கட்ட விசாரணை யில் தகவல்கள் வெளியாகியுள்ளன. சமீபத்தில் கர்நாடக மாநிலத்தின் கடற் கரையோரத்தில் திடீரென தீவிபத்து ஏற்பட்டு பெரும் பொருட்சேதம் ஏற்பட் டது என்பது குறிப்பிடத்தக்கது.