tamilnadu

சென்னையில் பதட்டமான வாக்குச்சாவடிகள் கணக்கெடுப்பு

சென்னை, மார்ச் 10- சென்னை மாவட்டத்தில் வட சென்னை, மத்திய சென்னை, தென் சென்னை ஆகிய 3 நாடாளுமன்ற தொகு திகள் உள்ளன. இந்த 3 தொகுதிகளில் 48 லட்சத்து 35 ஆயிரத்து 672 வாக்காளர்கள் உள்ளனர். இவர்கள் வாக்கு அளிப்பதற்காக 3 நாடளுமன்ற தொகுதிகளிலும் 4 ஆயிரத்து 676 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட உள்ளன. இந்த வாக்குச்சாவடிகளை எந்தெந்த பள்ளிகளில் மற்றும் சமூக நலக்கூடங்களில் அமைப்பது என்பது குறித்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள் ளது.

ஒவ்வொரு வாக்குச்சாவடி களிலும் 5 தேர்தல் பணியாளர்கள் பணி யாற்றுவார்கள். அவர்களுக்கு விரை வில் பயிற்சி வழங்கப்பட உள்ளது. சென்னை மாவட்டத்தில் அமைக் கப்படும் 4 ஆயிரத்து 676 வாக்குச் சாவடி களையும் சென்னை மாநகர காவல் துறையினர் 3 பிரிவுகளாக பிரித்து ஆய்வு செய்து வருகிறார்கள். சுமூக மாக வாக்குப்பதிவு நடக்கும் வாக்குச் சாவடிகள், பதட்டமான வாக்குச் சாவடிகள், மிக பதட்டமான வாக்குச் சாவடிகள் என்று 3 பிரிவுகளாக பிரிக்க ப்பட்டுள்ளன.

கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலின் போது சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் காவல் துறை யினர் நடத்திய ஆய்வில் 330 வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. 157 வாக்குச் சாவடி கள் மிக மிக பதட்டமானவை என்று கண்டு பிடிக்கப்பட்டன. அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தன. கடந்த 2021ஆம் ஆண்டு சட்ட சபை தேர்தல் நடந்த போது சென்னை  மாவட்டத்தில் பதட்டமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை 550ஆக உயர்ந்தது.

என்றாலும் மிக பதட்டமான வாக்குச் சாவடிகளின் எண்ணிக்கை சற்று குறைந்திருந்தது. இந்நிலையில் இது தொடர்பாக தற்போது சென்னை மாநகர காவல் துறையினர் தீவிர கணக்கெடுப்பு மற்றும் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். 3 தொகுதிகளிலும் எந்தெந்த வாக்குச் சாவடிகள் பதட்டமானவை என்று பட்டியல் தயாரிக்கப்பட்டு வருகிறது. விரைவில் பதட்டமான,

மிக பதட்ட மான வாக்குச்சாவடிகள் எவை என்பது தெரியவரும். அந்த வாக்குச்சாவடி களில் கூடுதலாக ஒரு அடுக்கு பாது காப்பு ஏற்பாடு செய்யவும், பாதுகாப்புக் காக காவலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும் சென்னை மாநகர காவல் துறையினர் திட்டமிட்டுள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு நாடாளு மன்ற தேர்தலின் போது 3 தொகுதி களில் 59 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

சட்டசபை தேர்தலின் போது வாக்குப்பதிவு எண்ணிக்கை சற்று அதி கரித்திருந்தது. தற்போது வாக்கு பதிவை 70 சதவீதமாக அதிகரிக்க தேர்தல் ஆணைய அதிகாரிகள் திட்ட மிட்டு இருக்கிறார்கள். இதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த திட்டமிட்டுள்ளனர்.