tamilnadu

img

தமிழக அரசுக்கு தெலுங்கானா முதல்வர் நன்றி...

சென்னை:
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங் கானா மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி நிதியுதவி அறிவித்ததற்கு, முதல்வர் பழனிசாமிக்கு அம்மாநில முதல் வர் மற்றும் ஆளுநர் நன்றி தெரிவித்துள்ளனர்.

தெலுங்கானா மாநிலத்தில் பெய்த அடை மழையால் தலைநகர் ஹைதராபாத் நகரம் முழுவதும்  சாலைகள், தெருக்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. நகரில் சுமார் 1,500 குடியிருப்புகள் மழை வெள்ளத்தால் சூழப்பட்டு தீவுகளாக காட்சி அளிக்கின்றன. ஏராளமானோர் வீடு, உடமைகளை இழந்து பரிதவிக்கின்றனர். உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளன. கடந்த நூறு ஆண்டுகளில்  கண்டிராத பெரும் சேதத்தை சந்தித்திருக்கிறது.இந்நிலையில், மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட தெலுங்கானா மாநிலத்துக்கு தமிழக முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து ரூ.10 கோடி அளிக்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி (அக்.19) அறிவித்தார்.இது தொடர்பாக, தமிழக அரசு  (அக். 20) வெளியிட்ட செய்திக் குறிப்பில்,“தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை, தெலுங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு, மழை வெள்ளத்தால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தெலுங்கானா மாநிலத்திற்கு தமிழ்நாடு அரசின் சார்பில் 10 கோடி ரூபாய் நிவாரண நிதி வழங்கப்படும் என்று அறிவித்தமைக்காக தனது நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.மேலும், தமிழ்நாடு முதல்வரின் தாயார் தவுசாயம்மாளின் மறைவுக்கு தெலுங் கானா மாநில முதல்வர் தனது இரங்கலையும் தமிழ்நாடு முதல்வருக்குத் தெரிவித்துக் கொண்டார்”.அதேபோன்று, தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன், தமிழ் நாடு முதல்வர் எடப்பாடி பழனிசாமியை தொலைபேசி மூலமாகத் தொடர்புகொண்டு நன்றியினைத் தெரிவித்துக் கொண்டார்.