வரலாற்று நிகழ்வுகள் குறித்து ஒன்றிய அரசின் சந்தேகத் திற்குரிய கூற்றுக்கள் குறித்து ஆசிரி யர்களும் அறிஞர்களும் கேள்வி எழுப் பாமல் இருப்பது வருத்தமளிக்கிறது என்றார் இந்தியத் தொல்லியல் துறை யின் கண்காணிப்பாளர் கே.அமர்நாத் ராமகிருஷ்ணன். அத்துடன் வரலாற் றில் அறிவியல் ஆய்வுகளின் அவசி யத்தை வலியுறுத்தினார்.
திருச்சிராப்பள்ளி பிஷப் ஹூபர் கல்லூரி தமிழ் மற்றும் வரலாற்றுத் துறை களும்- சென்னையை தளமாகக் கொண்ட வரலாற்று பாதுகாப்பு இயக்க மும் இணைந்து ‘சிந்து முதல் பொருநை வரை’ என்ற தலைப்பில் புதனன்று கருத்தரங்கம் நடத்தின. இதில் கலந்துகொண்டு ராமகிருஷ்ணன் பேசியதன் சுருக்கம்:
கீழடியில் உள்ள தொல்பொருள் கண்டுபிடிப்புகள், தமிழ் வரலாறு மற்றும் இலக்கியத்தின் சங்க காலத் தைக் கண்டறிய உதவியது மட்டு மல்லாது சங்க கால வரலாற்றின் அடிப்ப டை ஆராய்ச்சிக்கு வழி வகுத்துள்ளது.
கீழடி அகழ்வாராய்ச்சியின் முதல் இரண்டு கட்டங்கள் குறித்த அறிக்கை யை ஒன்பது மாதங்களில் வெளியிடு வோம் என ஒன்றிய அரசு உயர்நீதி மன்றத்தில் தெரிவித்துள்ளது.
மாணவர்கள் வரலாறு மற்றும் தொல்லியல் துறைகளை அறிவியலு டன் இணைத்துப் படிக்க வேண்டும். அப்போதுதான் தரவுகளை உறுதிப் படுத்த முடியும். ஆதாரத்துடன் ஒப்பிட்டுப் பார்க்க பிரம்மாண்ட அறிக்கைகள் மட்டும் போதாது. ஆதாரம் இல்லாத வரலாறு நிலைக்காது.
தமிழின் வயதை நிரூபிக்க உதவிய தொழில்நுட்பம்
வரலாற்று நிகழ்வுகள் பற்றிய ஒன்றிய அரசின் சந்தேகத்திற்குரிய கூற்றுக்களை ஆசிரியர்களும் அறி ஞர்களும் கேள்வி கேட்காதது வருத்த மளிக்கிறது. கல்வெட்டுகளின் கார்பன் டேட்டிங், தமிழ் மொழியின் வயதை உல கிலேயே பழமையானது என நிரூபிக்க உதவியது. ஆனால் இன்றும் கூட, சமஸ் கிருதம் தமிழை விட பழமையானது என்று செய்திகள் வருகின்றன.
சங்க இலக்கியம் வளமான பாரம் பரியம் கொண்டது மற்றும் நிலத்துடன் நெருக்கமான தொடர்புள்ளது உறு திப்படுத்தப்பட்டுள்ளது. அப்படி யிருந்தும், பலர் சங்ககால கலாச் சாரத்தின் உண்மைத்தன்மையை கேள்விக்குள்ளாக்கியுள்ளனர். ஏனெ னில் சான்றுகள் அழிக்கப்பட்டுவிட்டன அல்லது முழுமையாக கண்டுபிடிக்கப் படவில்லை. நமது அடையாளத்தைக் காப்பது அவசியம் என்றார்.
முன்னதாக பேசிய, வரலாறு பாது காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பா ளர் அ.கருணானந்தன், “வரலாற் றைத் திருத்தி எழுதுவதை நிறுத்து வது அவசியம். “வேத சகாப்தம்” கல்வி யின் மீது அழுத்தம் கொடுக்கிறது. மிகவும் பழமையான நாகரிகங்களின் உண்மையை திசைதிருப்ப வழி வகுக்கிறது” என்றார்.
சென்னைப் பல்கலைக்கழக இந்திய வரலாற்றுத் துறை பேராசிரிய ரும் தலைவருமான எஸ்.எஸ்.சுந்த ரம், ஒடிசா முதல்வரின் முன்னாள் தலைமை ஆலோசகர் ஆர்.பால கிருஷ்ணன் ஆகியோரும் நிகழ்வில் பங்கேற்றனர்.