tamilnadu

img

மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்றால் சஸ்பெண்ட்! - டாஸ்மாக் ஊழியர்களுக்கு எச்சரிக்கை

மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்றால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படும் என்று டாஸ்மாக் மேலாண் இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

டாஸ்மாக் கடைகளில் மதுப்பாட்டில்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக பல புகார்கள் வந்தன. நிர்ணயித்த விலையை விட கூடுதலாக ரூ.10 மற்றும் அதற்கு மேலாக விலை வைத்து மதுபானங்கள் விற்கப்படுவதாக புகார் எழுந்தது. இதையடுத்து டாஸ்மாக் ஊழியர்களுக்கு டாஸ்மாக் மேலாண் இயக்குநர் எச்சரிக்கை விடுத்து சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அந்த சுற்றறிக்கையில், மதுபான கடைகளில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட அதிகமாக விற்றால் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யப்படும் என்றும், விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தவறினால் மாவட்ட மேலாளர்கள் மீது துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் டாஸ்மாக் மேலாண் இயக்குநர் தெரிவித்துள்ளார்.