tamilnadu

தமிழ்தொழில்முனைவோர் 3-வது உலக மாநாடு

சென்னை, செப். 19- உலகில் 35 நாடுகளில் இருந்து தமிழ் தொழில்முனைவோர் பங்கேற்கும் மூன்றாம் அனைத்துலக தமிழ் தொழில்முனைவோர் மற்றும் திறனாளர்கள் மாநாடு சென்னையில் நவம்பர் 14 ஆம் தேதி முதல் 16 ஆம்தேதி வரை நடைபெற வுள்ளது.  தகவல் தொழில்நுட்பம், ஏற்றுமதி, இறக்குமதி, வணி கம், மின்னணு, நிதி, சரக்குப்போக்குவரத்து,  மருத்துவம், கல்வி, விவசாயம், இயற்கை விவசாயம், சித்தா ஆயுர்வேதா, யோகா, இசை, விளையாட்டு என உலகம் முழுவதும்  30 துறைகளை சேர்ந்தவர்கள்இதில் கலந்து கொள்கிறார்கள் என்று சென்னையில் செய்தி யாளர்களிடம் பேசிய  மாநாட்டை நடத்தும் எழுமின்  அமைப்பின் நிறுவனர் ஜெகத் கஸ்பார், அதன் இந்தியத் தலைவர் வழக்க றிஞர் காந்தி ஆகியோர் தெரிவித்தனர். முதல்மாநாடு மதுரையில் இரண்டாவது மாநாடு மலேசியாவிலும் நடைபெற்றதாகவும் 3 வது மாநாட்டில் படித்து பட்டம் பெறும் மாணவர்கள் சுயமாக தொழில் தொடங்க ஆலோசனைகள், வழிகாட்டு தல்கள் இந்த மாநாட்டில் கிடைக்கும் என்றும் அவர்கள் தெரிவித்தனர். தமிழ்மொழிசார்ந்த சிறு குறு முதலீட்டாளர்களை  இணைக்க  நிதி நிபுணர் மோகன் குமாரமங்கலம் தலைமையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு ள்ளதாகவும் அவர்கள் கூறினர்.