tamilnadu

img

தமிழ்நாடு காவல்துறையில் உயரதிகாரிகள் பணியிட மாற்றம்!

தமிழ்நாடு காவல்துறையில் முக்கிய உயரதிகாரிகள் பணியிட மாற்றம் செய்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசு, இது குறித்து வெளியிட்ட உத்தரவின்படி,

நெல்லை டிஐஜி மூர்த்தி, ராமநாதபுரம் டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

நெல்லை காவல் ஆணையர் சந்தோஷ் ஹதிமானி, நெல்லை சரக டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ராமநாதபுரம் டிஐஜி அபினவ் குமார், மதுரை டிஐஜியாக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

ஈரோடு மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக ஏ. சுஜாதா நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மாநகர காவல் உளவுப்பிரிவு- 1 துணை ஆணையராக ஆர். சக்திவேல் ஐபிஎஸ் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை மயிலாப்பூர் நலப்பிரிவு துணை ஆணையராக ஹரிகிரண் பிரசாத் நியமிக்கப்பட்டுள்ளார்.

சென்னை வண்ணாரப்பேட்டை காவல் துணை ஆணையராக பாஸ்கரன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை சி.பி.சி.ஐ.டி காவல்துறையின் வடக்கு மண்டல காவல்துறை கண்காணிப்பாளராக ஜி. ஜவகர் ஐ.பி.எஸ் மாற்றப்பட்டுள்ளார்.

சென்னை கிழக்கு போக்குவரத்து துணை ஆணையராக மெகலீனா ஹைடன் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை மாநகராட்சியின் கிழக்கு மற்றும் போக்குவரத்துத் துறை துணை ஆணையராக எஸ். மேகலினா ஐடன் பொறுப்பு வகிப்பார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.