tamilnadu

5 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் - தமிழக அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் 5 முக்கிய ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

தகவல் தொழில்நுட்ப துறை செயலாளராக இருந்த குமர குருபரன் ஐ.ஏ.எஸ். பள்ளிக்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

செயலாளராக வணிகவரித்துறை ஆணையராக இருந்த தீரஜ் குமார் ஐ.ஏ.எஸ். தகவல் தொழில்நுட்பத்துறை நியமிக்கப்பட்டுள்ளார்.

பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்த காகர்லா உஷா ஐ.ஏ.எஸ். சுற்றுலாத்துறை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகத்தின் இயக்குநராக இருந்த ஜெயஸ்ரீ முரளிதரன் ஐ.ஏ.எஸ். மாற்றுத்திறனாளிகள் நலத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

சுற்றுலாத்துறை இயக்குநராக இருந்த சந்தீப் நந்தூரி ஐ.ஏ.எஸ். தமிழ்நாடு தொழில் வளர்ச்சி கழகத்தின் மேலாண்மை இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.