tamilnadu

img

11 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் - தமிழ்நாடு அரசு உத்தரவு!

தமிழ்நாட்டில் காவல்துறையில் பணியாற்றும் திருவள்ளூர், திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் உட்பட 11 ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாட்டு அரசின் முதன்மை செயலாளர் அமுதா ஐஏஎஸ் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
1. திருப்பூர் எஸ்.பி சாமிநாதன், சென்னை லஞ்ச ஒழிப்புத்துறை எஸ்.பி.யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
2. திருவள்ளூர் எஸ்.பி பாகெர்லா கல்யாண், சென்னை தென்மண்டல பொருளாதார குற்றப்பிரிவு எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
3. சென்னையில் கட்டாய காத்திருப்பு பட்டியலிலிருந்த சீனிவாசபெருமாள் திருவள்ளூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
4. திருப்பூர் நகரச் சட்டம் ஒழுங்கு துணை ஆணையராகக் கோவை துணை ஆணையர் எம்.ராஜராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
5. மதுரை துணை ஆணையராக இருந்த அனிதா நெல்லை துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
6. திருப்பூர் துணை ஆணையராக இருந்த அபிஷேக் குப்தா, திருப்பூர் எஸ்.பியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
7. சென்னை கொளத்தூர் துணை ஆணையராக ஐபிஎஸ் அதிகாரி பாண்டியராஜன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
8. சென்னை வடக்கு சரக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பியாக வி.சரவணகுமார் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
9. மத்திய புலனாய்வு பிரிவு எஸ்பியாக வி.ஷியாமாலா தேவி நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
10. சென்னை தெற்கு சரக லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்பியாக சாமிநாதன் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
11. சென்னை சிஐடி எஸ்பியாக எஸ்.சக்திவேல் நியமனம் செய்யப்பட்டுள்ளார். 
இவ்வாறு அந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.