tamilnadu

img

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.6000 நிவாரணம்!

மிக்ஜாம் புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண நிதியாக ரூ.6000 வழங்கப்படும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்
பாதிக்கப்பட்ட மக்கள் குடியிருக்கும் பகுதிகளில் உள்ள நியாயவிலை கடைகளின் மூலம் ரொக்கமாக வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
மிக்ஜாம் புயல் பாதிப்புக்கான நிவாரணம் விவரங்கள்:
மிக்ஜாம் புயல், வெள்ளத்தினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு, இழப்பீட்டுத் தொகையை ரூ.4 லட்சத்திலிருந்து, ரூ.5 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்.
சேதமடைந்த குடிசைகளுக்காக ஏற்கெனவே வழங்கப்படும் தொகை ரூ.5 ஆயிரத்தினை, ரூ.8,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
நெற்பயிர் உள்ளிட்ட இறவைப் பாசனப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.13,500/-லிருந்து, ரூ.17,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
மானாவாரிப் பயிர்களுக்கு ஹெக்டேர் ஒன்றுக்கு ரூ.7,410-லிருந்து, ரூ.8,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
எருது, பசு உள்ளிட்ட கால்நடைகளின் உயிரிழப்பு நிவாரணமாக ரூ.30,000 என்றிருந்ததை ரூ. 37,500 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
வெள்ளாடு, செம்மறி ஆடு உயிரிழப்பு நிவாரணமாக ரூ.3,000 என்றிருந்ததை, ரூ.4,000 ஆக உயர்த்தி வழங்கப்படும்.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு