தமிழ்நாடு அரசின் சட்டப்பேரவையின் முதல் கூட்டத்தொடர் கடந்த 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கிய நிலையில், இன்று தமிழ்நாடு அரசின் 2024-2025 ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்.
அதன் முக்கிய அம்சங்கள்:
மொழி:
சிலப்பதிகாரம், மணிமேகலை உள்ளிட்ட நூல்களை மேலும் 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு.
அடுத்த மூன்று ஆண்டுகளில் 600 புதிய நூல்கள் தமிழில் வெளியிடப்படும். தமிழ் மொழியை நவீனப்படுத்த AI உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு.
தொல்லியல்:
முசிறி, தொண்டி ஆகிய இடங்களிலும் அகழாய்வு நடத்தப்படும்.
ரூ.65 லட்சம் செலவில் அழகன் குளத்தில் ஆழ்கடல் அகழாய்வு மேற்கொள்ளப்படும்.
கீழடி, வெம்பக்கோட்டை, பொற்பனைக்கோட்டை உள்ளிட்ட 8 இடங்களில் அகழாய்வு பணிகளை மேற்கொள்ளப்படும். கீழடியில் திறந்தவெளி அரங்கு ரூ.17 கோடி செலவில் அமைக்கப்படும்.
பெண்களுக்கான திட்டம்:
மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு பட்ஜெட்டில் ரூ.13,720 கோடி ஒதுக்கீடு.
மகளிர் இலவச பேருந்து பயண திட்டத்திற்கு இந்த ஆண்டில் ரூ.3050 கோடி ஒதுக்கீடு.
பணிபுரியும் மகளிருக்கான தோழி விடுதிகளை புதியதாக அமைக்க ரூ.26 கோடி ஒதுக்கீடு.
10,000 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் உருவாக்க ரூ.35,000 கோடி ஒதுக்கீடு.
கல்வி:
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கும் புதுமைப்பெண் திட்டத்தில், இந்த ஆண்டு முதல் அரசு உதவிபெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயிலும் மாணவிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தமிழ்நாட்டில் கிராமப் புறங்களில் அரசு உதவி பெறும் பள்ளிகளும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவுபடுத்தப்படும்; இதற்காக ரூ.600 கோடி ஒதுக்கீடு.
பள்ளிகளில் 15,000 ஸ்மார்ட் வகுப்பறைகள் ரூ.300 கோடியில் உருவாக்கப்படும்.
இல்லம் தேடி கல்வி திட்டத்திற்கு ரூ.100 கோடி ஒதுக்கீடு.
பள்ளிக் கட்டமைப்பை மேம்படுத்த ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
உயர் கல்வித் துறைக்கு ரூ.8,212 கோடி நிதி ஒதுக்கீடு.
ஒரு லட்சம் மாணவர்களுக்கு கல்விக்கடன் வழங்க ரூ.2,500 கோடி ஒதுக்கீடு.
அரசு பொறியியல், கலை அறிவியல், பாலிடெக்னிக் கல்லூரிகளில் கட்டமைப்பு பணிகளுக்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு!
7.5% உள் ஒதுக்கீட்டில் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் படிப்புக்கான முழுச் செலவையும் அரசே ஏற்கும்.
மருத்துவம்:
மருத்துவத் துறைக்கு இந்த நிதியாண்டில் ரூ.20,198 கோடி நிதி ஒதுக்கீடு.
சுகாதார மையங்கள் முதல் மருத்துவ கல்லூரிகள் வரை கட்டமைப்புகளை தரம் உயர்த்த ரூ.333 கோடி நிதி ஒதுக்கீடு.
ஊட்டச்சத்து குறைபாடு உள்ள தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகம் வழங்கப்படும்.
Autism நோயால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.25 கோடி செலவில் உயர்திறன் மையம் அமைக்கப்படும்.
புற்றுநோய் மேலாண்மை இயக்கம் அமைக்கப்படும்.
25 அரசு மருத்துவமனைகளில் போதைப் பழக்கத்தில் இருந்து மீட்பு சிறப்பு மையங்கள் அமைக்கப்படும்.
2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகள் கட்ட ரூ.356 கோடி ஒதுக்கீடு.
5000 ஏரிகள், குளங்கள் புனரமைப்பு செய்ய ரூ.500 கோடி ஒதுக்கீடு.
முதலமைச்சரின் தாயுமானவர் என்ற புதிய திட்டம் அறிமுகம். மிகவும் வறிய நிலையில் உள்ள 5 லட்சம் ஏழைக்குடும்பத்தினருக்கு அரசின் உதவிகளை ஒருங்கிணைத்து வழங்கி அவர்களை வறுமையில் இருந்து மீட்டெடுக்க அரசு உறுதி.
கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் 2030ஆம் ஆண்டுக்குள் தமிழ்நாட்டின் ஊரகப் பகுதிகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள் கட்டப்படும்.
கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டத்தில் சாலைப்பணிகள் ரூ.1000 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படும்.
சிங்காரச் சென்னை 2 திட்டத்திற்கு ரூ.500 கோடி ஒதுக்கீடு.
சென்னையில் சாலைகளை விரிவுபடுத்த ரூ.300 கோடி ஒதுக்கீடு.
சென்னை கடற்கரை பகுதிகளை மேம்படுத்த ரூ.100 கோடி ஒதுக்கீடு.
சென்னை மாநகரில் பொதுக்கழிப்பிடங்களை மேம்படுத்த ரூ.430 கோடியில் புதிய திட்டம்.
வடசென்னை பகுதியில் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள ரூ.1000 கோடி ஒதுக்கீடு.
சென்னை பூவிருந்தவல்லி அருகே திரைப்பட நகரம் அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கீடு
அடையாறு நதி சீரமைப்புக்கு ரூ.1500 கோடி ஒதுக்கீடு.
மதுரை, கோவை, திருச்சி, ஈரோடு ஆகிய நகரங்களில் நதிகளை மீட்டெடுக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்ய ரூ.5 கோடி ஒதுக்கீடு.
வைகை, காவிரி, தாமிரபரணி, நொய்யல் ஆறுகளை ஒட்டிய பகுதிகளை மேம்படுத்த புதிய திட்டம்.
நாமக்கல்லில் ரூ.358 கோடியில் கூட்டுக் குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படும்.
உயர்கல்வி பெற விரும்பும் மாற்று பாலினத்தவர்களுக்கான அனைத்து செலவுகளையும் அரசே ஏற்கும்.
அடுத்த 2 ஆண்டுகளில் 50,000 இளைஞர்களுக்கு அரசுப் பணி.
ஜூன் மாதத்திற்குள் 10,000 பணியிடங்கள் நிரப்பப்படும். இதுவரை 60,567 இளைஞர்களுக்குப் பணி நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
1,000 மாணவர்களுக்குக் குடிமைப்பணித் தேர்வுக்கான (UPSC) பயிற்சி.
2023-24 பட்ஜெட்டில் தமிழ்நாடு அரசின் வருவாய் ஆதாரம்:
மாநில சொந்த வரி வருவாய் - ரூ.1.95 லட்சம் கோடி
மாநில வரியல்லா வருவாய் - ரூ.30,728 கோடி
ஒன்றிய அரசின் மானியம் - ரூ.23,354 கோடி
மத்திய வரிகளின் பங்கீடு - ரூ.49,755 கோடி
மொத்தம் - ரூ.2.99 லட்சம் கோடி
துறை வாரியாக ஒதுக்கப்பட்ட நிதி விவரங்கள்:
பள்ளிக்கல்வித்துறை - ரூ.44,042 கோடி ஒதுக்கீடு
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை - ரூ.20,198 கோடி ஒதுக்கீடு
நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை - ரூ.20,043 கோடி
உயர்கல்வித்துறை - ரூ.8,212 கோடி ஒதுக்கீடு
தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத்துறை - ரூ.2,295 கோடி ஒதுக்கீடு
குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் துறை - ரூ.1,557 கோடி ஒதுக்கீடு
நீர்வளத்துறை - ரூ.8,398 கோடி ஒதுக்கீடு