tamilnadu

img

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் பிப்.12 ஆம் தேதி தொடக்கம்!

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு, தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கும் என்றும், 2024-25 நிதியாண்டுக்கான தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பிப்ரவரி 19-ஆம் தேதி தாக்கல் செய்கிறார்; பிப்ரவரி 20-ஆம் தேதி, 2024-25 நிதியாண்டின் முன்பண மானிய கோரிக்கையை தாக்கல்; பிப்ரவரி 21-ஆம் தேதி 2023-24 நிதியாண்டுக்கான கூடுதல் செலவுக்கான நிதி அறிக்கையை தாக்கல் செய்யப்படும் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.