சென்னை, ஏப். 10 - சென்னையில் நிலவும் குடிமனை பட்டா பிரச்சனை தீர்க்கப்படும் என்று தமிழச்சி தங்கபாண்டியன் கூறினார். தென் சென்னை மக்கள வைத் தொகுதி திமுக வேட்பாளர் த.சுமதி (எ) தமிழச்சி தங்கபாண்டியன் புதனன்று (ஏப். 10) சைதாப் பேட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈக்காடு தாங்கல் உள்ளிட்ட பகுதி களில் வாக்கு சேகரித்தார்.
பிரச்சாரத்தில் திமுக சென்னை தெற்கு மாவட்டச் செயலாளர் மா.சுப்பிரமணி யன், பகுதிச் செயலாளர் துரைராஜ், சிபிஎம் பகுதிச் செயலாளர் ஜி.வெங்கடேஷ் உள்ளிட்டு கூட்டணி கட்சியி னர் கலந்து கொண்டனர். பிரச்சாரத்திற்கு சென்ற இடங்களில் பெண்கள் ஆரத்தி எடுத்தும், கூட்டணி கட்சியினர் மாலைகள் அணிவித்தும், ஆடை போர்த்தியும், மலர்த்தூவி யும் வரவேற்றனர். அப்போது பெண்கள் வீட்டு மனைப் பட்டா பெற்றுத் தரு மாறு கோரிக்கை வைத்த னர்.
அதற்கு பதிலளித்த வேட்பாளர் தமிழச்சி தங்க பாண்டியன், சென்னை நகரம் முழுவதும் குடி மனைப்பட்டா பிரச்சனை உள்ளது. இந்தப் பிரச்ச னைக்கு தீர்வு காண முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் 5 அமைச்சர்கள் கொண்ட குழுவை அமைத்துள்ளது. தேர்தலுக்கு பிறகு அந்தக் குழு நல்ல முடிவு எடுக்கும். குடிமனைப்பட்டா இல்லாத, தகுதியுள்ள அனைவருக் கும் பட்டா வழங்கப்படும் என உறுதி அளிக்கிறேன் என்றார்.