விழுப்புரம், மே 25- மகாராஷ்டிர மாநிலம் மும்பை தாராவி உள்ளிட்ட பகுதியில் இருந்து தமிழகத்தைச் சேர்ந்த விழுப்புரம், வேலூர், திருவண்ணா மலை, கள்ளக்குறிச்சி, கடலூர், கோயம் புத்தூர், சேலம் உள்ளிட்ட பல மாவட்டங் களைச் சேர்ந்த 1,382 பேர் சிறப்பு ரயில் மூலம் திங்களன்று (மே 25) விழுப்புரம் வந்தனர். அவர்களை விழுப்புரம் மாவட்ட ஆட்சி யர் அண்ணாதுரை, காவல் துறை கண்கா ணிப்பாளர் ஜெயக்குமார் ஆகியோர் வர வேற்றனர். பின்னர் அவர்களுக்கு காய்ச்சல் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, 47 பேருந்துகள் மூலம் அந்தந்த மாவட்டத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வெளி மாநிலத் தொழிலாளர்கள் கொரானா சிறப்பு சிகிச்சை பிரிவு மையங்களில் தங்க வைக்கப் பட்டுள்ளனர்.