விருதுநகர், பிப்.3- “அரசியல் அமைப்புச் சட்டம் காப்போம்“ “ மதவெறி மாய்ப்போம்“ என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு சிறுபான்மை நலக்குழுவின் சார்பில் மாநிலம் முழுவதும் பிரச்சார இயக்கம் நடைபெற உள்ளது. இப்பிரச்சார இயக்கத்தின் துவக்க விழா மற்றும் கருத்தரங்கம் விருதுநகரில் பிப்ரவரி 3 சனிக்கிழமையன்று எழுச்சியுடன் நடைபெற்றது.
இதில் மதநல்லிணக்கத்துடன் அனைத்து சமூகத்தினரும் பங்கேற்றனர். விருதுநகரில் தனியார் மண்டபத்தில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு மாவட்டத் தலைவர் எஸ்.கே.ராஜேந்திரன் தலைமை தாங்கினார். மாநில துணைத் தலைவர் வ.கல்யாணசுந்தரம், மாநிலக்குழு உறுப்பினர்கள் பீர்முஹம்மது, சிந்தா, ஜி.எம்.நாகராஜன், எம்.இப்ராஹிம், என்.கணேசமூர்த்தி, இரா.வேணுகோபால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்டச் செயலாளர் ஏ.மரியடேவிட் வரவேற்புரையாற்றினார். மாநிலச் செயலாளர் எம்.தாமஸ் சேவியர் துவக்கவுரையாற்றினார்.
மாநில பொதுச் செயலாளர் எம்.இராமகிருஷ்ணன் பிரச்சாரத்தின் நோக்கங்கள் பற்றி விளக்கி உரையாற்றினார். இதையடுத்து பாலபிரஜாபதி அடிகளார், தமிழ்நாடு ஜமாஅத்துல உலமா சபை மாநிலத் தலைவர் மௌலவி பி.ஏ.காஜாமுய்னுத்தீன், அருட்தந்தை அந்தோணி பாக்கியம் ஆகியோர் கருத்துரை வழங்கினர். தமுஎகச மாநிலத் தலைவர் மதுக்கூர் இராமலிங்கம் சிறப்புரையாற்றினார். முடிவில் மாவட்ட பொருளாளர் எல்.தஸ்தகீர் நன்றி கூறினார். முன்னதாக புயல் கலைக்குழுவின் பறையிசை மற்றும் பாடல் நிகழ்ச்சி நடைபெற்றது.
மேலும் இதில், மாவட்ட ஐக்கிய ஜமாத் தலைவர் எம்.முஹம்மது எகியா, கிறிஸ்தவ இளம் போதகர்கள் ஐக்கியத்தின் சி.காத்திக் ஸ்டீபன், எம்.நாகூர்மீரான் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் ஜெ.ஜே.சீனிவாசன், ஐ.ஜெயா, ஏ.பாக்கியராஜ், ஏ.ராமு, எம்.சரஸ்வதி சுந்தரம், ஞான செல்வராஜ், பூலாங்கல் ஊராட்சி மன்ற தலைவர் அஜ்மல்கான் ஆகியோர் உட்பட பலர் பங்கேற்றனர்.