tamilnadu

img

நீண்டநாள் சிறைவாசிகளை விடுதலை செய்ய ஆளுநர் ஒப்புதல் அளிக்க வேண்டும்

சென்னை, ஜன. 9 -  நீதிக்கு புறம்பாக உள்ள நீண்ட நாள் சிறைவாசிகளை விடுதலை செய்யும் தமிழக அரசின் முடிவுக்கு ஆளுநர் ஒப்புதல் அளித்து, விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு சிறுபான்மை மக்கள் நலக்குழுவின் மாநில மாநாடு வலியுறுத்தி உள்ளது.

நலக்குழுவின்  4ஆவது மாநாடு செவ்வாயன்று (ஜன.9) சென்னை யில் நடைபெற்றது. மாநாட்டிற்கு தலைமை தாங்கி பேசிய அமைப்பின் மாநிலத் தலைவர் எஸ்.நூர்முகமது, “தமிழகத்தில் ஆங்காங்கே நடை பெறும் நிகழ்வுகள் சிறுபான்மையி னரை அச்சம் கொள்ள செய்கிறது. காவல்துறையினர் பாஜகவினராக செயல்படுகிறார்களோ என்ற அச்சம் எழுகிறது. இதனை அரசு சரி செய்ய வேண்டும். பெரும்பான்மை, சிறு பான்மை மக்களை ஒருங்கிணைத்து நலக்குழுவை நடத்துகிறோம். வகுப்பு வாத அரசியலுக்கு எதிராக செயல்படு வோம். 2024ஆம் ஆண்டில் மதச் சார்பற்ற அரசை அமைப்போம்” என்றார்.

சிறுபான்மையை காப்பதே பெரும்பான்மைக்கு பெருமை
மாநாட்டை வாழ்த்தி பேசிய முது முனைவர் மு.பெ.சத்தியவேல் முரு கனார், “தங்கம் என்ற உலோகம் கொடிக்கொடியாக கிடைக்கும்; அது சிறு பான்மை. ஆனால் அதிக மதிப்புடை யது. பெரும்பான்மையாக கிடைப்பது இரும்பு. இரும்பு பெட்டிக்குள் தங்கத்தை வைக்கும்போதுதான் இரும்புக்கு மதிப்பு அதிகமாகிறது.

உடலில் ஆண்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருந்தாலும், பெண்களை பாது காக்கும்போதுதான் அவர்களுக்கு மதிப்பு உயர்கிறது. உலோகத்திலும், உயிரிலும் சிறுபான்மையை காக்கும் போதுதான் பெரும்பான்மை பெரு மைப்படுகிறது” என்றார். “எல்லா மதங்களும் தெய்வம் உண்டு என்கின்றன. அப்படி இருக்கை யில் மதத்தில் பெரும்பான்மை சிறு பான்மை என்று இருக்கவே முடியாது. உலகில் அதிகளவு ரத்தம் சிந்தியதற்கு காரணம் மதவெறியர்கள்தான். மதச்சான்றோர்கள் நற்குணங்களை கூறுகின்றனர்.

எந்த மதமும் இன் னொரு மதத்தை அழிக்கச் சொல்ல வில்லை. நான் சைவ சித்தாந்தி. ஈசன் என்பது குரானில் ஈசாநபி என்றும் கிறிஸ்துவத்தில் இயேசு என்று கூறு கின்றனர். 24 மதங்களின் வேதங்களை படித்துள்ளேன். மதச்சான்றோர்கள் ஒன்றாக சிந்திக்கிறார்கள். சண்டை போடுகிறவர்கள் சில்லரைகளாக உள்ளனர். சில்லரைதான் அதிகம் சத்தம் போடும். திருவாசகத்தில் மாணிக் கவாசகர் என்ற அடியேனுக்கு, சிவ பெருமான் அரேபியாவிலிருந்து முஸ்லீம் வணிகனாக வந்து குதிரை விற்றுள்ளார். எந்நாட்டவருக்கும் இறை வன் ஒருவன்தான். மக்கள் ஒன்றாக உள்ளபோது சிலர் பிரிக்கிறார்கள். அனைத்து மதத்தினருடனும் உறவாடு வதால் என்மீது 8 வழக்குகளை போட் டார்கள். அனைத்து வழக்குகளிலும் வெற்றி பெற்றுள்ளேன். சான்றோர் கள்படுத்திய நெறியில் செல்வோம்” என்றும் அவர் கூறினார்.

தீர்மானங்கள்
இந்த மாநாட்டில், சிறுபான்மை மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த கல்வி உதவித்தொகைகளை ஒன்றிய பாஜக அரசு நிறுத்திவிட்டது. அவற்றை மீண்டும் வழங்க வேண்டும். சிறு பான்மையினருக்கென்று மாவட்டங்க ளில் தனி அதிகாரியை நியமனம் செய்ய வேண்டும், சிறுபான்மை மக்களுக்கு இலவச வீட்டுமனை வழங்க வேண்டும்.

வீடில்லாத சிறுபான்மையினருக்கு  அரசு அடுக்குமாடி குடியிருப்புகளில் இலவசமாக ஒதுக்கீடு செய்ய வேண்டும். இடம் இருந்தும் வசதி இல்லா தவர்களுக்கு வீடு கட்ட மானியத்துடன் கூடிய சுலப கடன் திட்டத்தை செயல் படுத்த வேண்டும். சுயமாக தொழில் செய்வோருக்கு அரசு வழங்கி வரும் கைவினை தொழி லுக்கான கருவிகளை கூடுதலான மானியத்துடன் வழங்க வேண்டும். சிறுபான்மை மக்களுக்கு சிறு தொழில் மற்றும் வணிகத்துக்கு வங்கி கடன் வழங்கும்போது வெளிநபர் பிணை கேட்காமல் சொந்த பொறுப்பில் கடன் வழங்க வேண்டும்.

தேவாலயங்கள் மற்றும் மசூதி களை கட்டுவதற்கான விண்ணப்பங்க ளை உடனுக்குடன் ஆய்வு செய்து அனுமதி தர வேண்டும், வயது வரம்பை நீக்கி அனைத்து உலமாக்களுக்கும் மானிய விலையில் இருச்சக்கர வாக னம் வழங்க வேண்டும், பாரிஸ்டர் ஜார்ஜ் ஜோசப்புக்கு நினைவு மண்டபம் அமைத்து, அரசு விழா நடத்த வேண் டும். கபர்ஸ்தான் மற்றும் கல்லறை தோட்டம் அமைத்துக் கொள்ள அரசு நிலம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

பாராட்டு

படைப்பாளிகள் சம்சுதீன் ஹீரா, அ.கரீம், எம்.அபுதாகீர், மு.இக்பால் அகமது, இ.பா.சிந்தன் சார்பில் அவரது தந்தை பாக்கியம், வாள்வீச்சு வீராங்கனை சுமையா ஆகியோரை காஷ்மீர் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் யூசுப் தாரிகாமி கவுரவித்தார்.

முன்னதாக வரவேற்புக்குழு தலை வர் க.பீம்ராவ் வரவேற்றார். மாநில துணைத்தலைவர் ப.மாரிமுத்து அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாநாட்டை தொடங்கி வைத்து காஷ்மீர் அனைத்து எதிர்க்கட்சிகளின் கூட்ட மைப்பு ஒருங்கிணைப்பாளர் யூசுப் தாரிகாமி உரையாற்றினார். அமைப் பின் பொதுச் செயலாளர் எம்.ராம கிருஷ்ணன் விருந்தினர்களை அறி முகம் செய்து பேசினார்.