tamilnadu

வெள்ள நிவாரணம் கேட்டு தமிழ்நாடு அரசு வழக்கு

சென்னை, ஏப். 3 - தமிழ்நாட்டுக்கான வெள்ள நிவா ரணமாக ரூ.2 ஆயிரம் கோடியை உடனடியாக வழங்க உத்தரவிடக் கோரி ஒன்றிய அரசுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடர்ந்துள்ளது. வேலூர் மாவட்டம் கோட்டை  மைதானத்தில், செவ்வாய்க்கிழமை யன்று திமுக கூட்டணி தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டம் நடைபெற் றது.

அதில், வேலூர் திமுக வேட்பா ளர் கதிர் ஆனந்த் மற்றும் அரக்கோ ணம் திமுக வேட்பாளர் ஜெகத்ரட்ச கன் ஆகியோருக்கு வாக்கு சேக ரித்துப் பேசிய தமிழக முதல்வர் மு.க.  ஸ்டாலின், தமிழ்நாட்டில் 8 மாவட்டங் களில் ஏற்பட்ட வெள்ளப் பாதிப்புக்கு ஒரு பைசா கூட நிதி வழங்காத ஒன் றிய அரசு மீது உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித் திருந்தார். “தமிழ்நாட்டிற்குச் சில ‘பார்ட்- டைம்’ அரசியல்வாதிகள் வருகிறார் கள்! யாரைச் சொல்கிறேன் என்று உங்களுக்கே தெரியும்.

யார்? பிரதமர் மோடி. பொய்களையும், அவதூறு களையும் துணைக்கு அழைத்துக் கொண்டு தேர்தல் சீசனிற்கு மட்டும் வருவார்! வெள்ளம் வந்தால் வர மாட்டார்! நிதி கேட்டால் கொடுக்க மாட்டார்!  நேற்றுகூட… கேரள மாநில அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் கடன் வாங்க ஒன்றிய அரசு அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் சென்று வாதாடினார்கள். கர்நாடக அரசு நீதிமன்றம் சென்று வறட்சி நிவாரணம் தரச் சொல்லுமாறு வாதாடுகிறார்கள். நாமும் வெள்ள நிவாரணம் கேட்டுக் கேட்டுப் பார்த் தோம். தரவில்லை.

நாளை காலை உச்சநீதிமன்றத்தில் வழக்கு போடப் போகிறோம்” என்று குறிப்பிட்டி ருந்தார். அதன்படி ஒன்றிய அரசு மீது,  தமிழ்நாடு அரசு சார்பில் புதன்கிழமை யன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. அதில், “கடந்த 2023 டிசம்பர் மாதம் ஏற்பட்ட மிக்ஜாம் புயல்  மற்றும் கனமழையால், தமிழகத்தின் பல மாவட்டங்கள் பாதிக்கப் பட்டன. ஆகவே, புயல் மற்றும்  கனமழையால் ஏற்பட்ட சேதங் களை சரிசெய்ய ரூ. 19 ஆயிரத்து  692 கோடியே 69 லட்சம் நிவா ரணத் தொகையை விடுவிக்குமாறு ஒன்றிய உள்துறை அமைச்சகத்திடம் கடந்த டிசம்பர் 14 அன்று கோரி யிருந்தோம்.

அதேபோல, கடந்த டிசம்பர் மாதம் 17, 18 ஆகிய தேதி கள், தமிழகத்தின் தென் மாவட்டங் களில் வரலாறு காணாத மிகக் கன மழை பெய்தது. அந்த மழையால் ஏற்பட்ட சேதங்களை சரிசெய்ய, நிவாரணமாக ரூ. 18 ஆயிரத்து 214  கோடியே 52 லட்சத்தை விடுவிக்கு மாறும், ஒன்றிய நிதி அமைச்சரான நிர்மலா சீதாராமனிடம் கோரியிருந் தோம். ஆனால், தமிழக மழை வெள்ள பாதிப்புகளை முழுமையாக ஆய்வு செய்த பின்னரும், ஒன்றிய அரசு தமிழகத்திற்கு நிவாரணம் வழங்கவில்லை. எனவே, தமிழக அரசு கோரிய நிவாரணத்தை உட னடியாக வழங்க உத்தரவிட வேண் டும்” என மனுவில் குறிப்பிடப்பட்டு உள்ளது.