tamilnadu

img

தமிழக வெள்ளப் பாதிப்பு: கேரள மாநில மாதர் சங்கம் ரூ.5 லட்சம் நிதியுதவி

தமிழ்நாடு மாநில வெள்ள நிவாரண பணிகளுக்காக, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் கேரள மாநில கிளைகள்  ரூ. 5 லட்சம் நிதி வசூலித்துக் கொடுத்துள்ளன. திருவனந்தபுரத்திலுள்ள மாதர் சங்கத்தின் கேரள மாநில அலுவலகமான சுசிலா கோபாலன் நினைவகத்தில் நடைபெற்ற இதற்கான நிகழ்ச்சியில், சங்கத்தின் அகில இந்தியத் தலைவர் ஸ்ரீமதி டீச்சர் மற்றும்  கேரள மாநில பொதுச்செயலாளர் சுஜாதா ஆகியோர் இந்நிதியை வழங்கினர். இதனை மாதர் சங்கத்தின் அகில இந்திய துணைத் தலைவர் பி. சுகந்தி, மாநிலத் தலைவர் எஸ். வாலண்டினா ஆகிய தமிழகத்தைச் சேர்ந்த தலைவர்கள் பெற்றுக் கொண்டனர்.