சென்னை, ஜன.6- பொங்கல் பரிசுத் தொகுப்பான கரும்பை, தமிழக அரசு விவசாயிகளி டமே நேரடியாக கொள்முதல் செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு விவசாயி கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து விவசாயிகள் சங்கத் தின் மாநிலப் பொதுச்செயலாளர் சாமி. நடராஜன் தனது செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு அரசின் சார்பில் உழவர் திருநாள் - தைப்பொங்கலை ஒட்டி அறி விக்கப்பட்டுள்ள உதவித்தொகை ஆயி ரம் ரூபாய் மற்றும் பொங்கல் வைப்ப தற்குத் தேவையான பொருட்கள் வழங் கும் திட்டத்தை தமிழ்நாடு விவசாயி கள் சங்கத்தின் சார்பில் வரவேற்கிறோம்.
மேற்கண்ட பொருட்களோடு ஒவ் வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என்று அறிவித்தது அந்த கரும்பை, பயி ரிட்டுள்ள விவசாயிகளிடம் ஒரு கரும் பிற்கு 30 ரூபாய் கொடுத்து கொள்முதல் செய்யப்படும், கரும்புகளை வாக னங்களில் ஏற்றிச்செல்வதற்கு தனி யாக ஒவ்வொரு கரும்பிற்கும் 3 ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது எனவும் மாநில அரசு அறிவித்தது. கரும்பு விவசாயி களுக்கு அரசு அறிவித்த விலை கிடைக்கவில்லை என பல இடங்களில் புகார்கள் எழுந்துள்ளன.
எனவே, மாநில அரசு விவசாயிகளி டம் கரும்பு கொள்முதல் செய்யும் பணியை இடைத்தரகர்கள் மற்றும் தனியார் ஒப்பந்ததாரர்கள் மூலம் மேற் கொள்ளக்கூடாது. அப்படி செய்வதால் அரசு அறிவித்துள்ள விலையில் பாதி கூட விவசாயிகளுக்கு கிடைக்காது. எனவே அதிகாரிகள் மூலம் விவசாயி களிடம் நேரடியாகவே கரும்பை வெளிப்படைத்தன்மையுடன் கொள் முதல் செய்வதை உறுதிப்படுத்திட வேண்டும். இவ்வாறு சாமி.நடராஜன் வலியுறுத்தியுள்ளார்.