த மிழகம் கம்யூனிச இயக்கமும், திராவிட இயக்கமும் பலமாக இருக்கும் மாநிலம். ஆனால் இதையும் தாண்டி மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன. மக்கள் மத்தியில் திட்டமிட்டு இந்துத்துவா கருத்தியலை கொண்டு செல்ல மதவெறி சக்திகள் முயற்சிக்கின்றன.
மக்கள் மத்தியில் நிலவும் இறை உணர்வுகளை நாம் கொச்சைப்படுத்துவதில்லை. ஆனால் அது வெறியாக மாற்றப்பட்டு, இதர மதத்தினரை அச்சத்திற்கு உள்ளாக்குவதை கண்டிக்கின்றோம். இந்துத்துவா அரசியலை சில அமைப்புகள் முன்னெடுத்து செல்கின்றன. இது இந்து நாடு, இது இந்துக்களுக்கு மட்டும் சொந்தமான நாடு என்று கூறி சிறுபான்மையின மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். இத்தகைய வகுப்புவாதிகளிடமிருந்து தமிழக மக்கள் விழிப்போடு இருக்க வேண்டும்.