tamilnadu

சிறப்பு பயிற்சி பெற தமிழக கல்லூரி மாணவர்கள் லண்டன் பயணம்

சென்னை, ஜூன் 9- நான் முதல்வன் திட்டத்தின்கீழ் பல்வேறு பாடப்பிரிவுகளுக்கு தேர்வு செய்யப்பட்ட தமிழக கல்லூரிகளை சேர்ந்த 25 மாணவர்கள், சென்னை விமான நிலையத்தில் இருந்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை அந்தந்த பாடப்பிரிவுகளில் சிறப்பு பயிற்சி பெறுவதற்காக லண்டன் புறப்பட்டு சென்றனர்.

தற்போது இங்கிலாந்தின் தலைநகர் லண்டனில் நியூகேஸ்டல் துர்ஹாம் பல்கலைக்கழகத்தில் செயற்கை நுண்ணறிவு, தரவு அறிவியல் ஆகிய பாடப்பிரிவுகளில் ஒரு வார சிறப்பு திறன் மேம்பாட்டு பயிற்சிக்கு பிரிட்டிஷ் கவுன்சி லுடன் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் இணைந்து, தமிழ்நாட்டில் உள்ள 15 பொறியியல் மற்றும் 10 கலை, அறி வியல் கல்லூரி மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.

முன்னதாக, இப்பயிற்சிக்காக ஏராள மான  மாணவர்களிடமிருந்து, அந்தந்த கல்லூரிகள் மூலம் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் பெற்றது.

இதில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு 1,267 கல்லூரி மாணவர்கள் விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பல்வேறு திறனாய்வுத் தேர்வுகள் நடத்தி, அதில் 100 பேர் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர், அந்த மாண வர்களுக்கு ஆன்லைன் மூலமாக பயிற்சி கள் அளிக்கப்பட்டு, அதில் சிறப்பாக செயல்பட்ட 25 மாணவர்கள் லண்டனில் சிறப்பு பயிற்சி பெறுவதற்கு தேர்வு செய்யப்பட்டனர்.

இந்நிலையில் திறனாய்வு தேர்வு களில் தேர்ச்சி பெற்ற 25 கல்லூரி மாண வர்கள் மற்றும் அவர்களுக்கு உதவி யாக 2 பேராசிரியர்களும் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம் மூலம் சென்னை விமான நிலையத்தின் சர்வதேச முனையத்தில் இருந்து ஞாயிறன்று, லண்டனுக்கு புறப்பட்டுச் சென்றனர். அந்த  மாணவர்களை அவர்களின் பெற்றோர், நண்பர்கள், உறவினர்கள் மகிழ்ச்சியுடன் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர்.