tamilnadu

img

தமிழ் கல்வெட்டுகள் சென்னைக்கு மாற்றம்; அரை நூற்றாண்டு கனவு நினைவாகிறது- சு.வெங்கடேசன் எம்பி

மைசூரில் வைக்கப்பட்டுள்ள தமிழ் கல்வெட்டுகள் அனைத்தையும், சென்னைக்கு இடமாற்றம் செய்ய இந்திய தொல்லியல் துறை உத்தரவிட்டுள்ளது. இதற்கு மதுரை  நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

சென்னை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட்ட தமிழக கல்வெட்டுகள், நினைவுச் சின்னங்கள், உதகைக்கு மாற்றப்பட்டு அதன் பின் கடந்த 1966ஆம் ஆண்டு மைசூருக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்கு தமிழ் கல்வெட்டுகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து மைசூரில் உள்ள தமிழ்க் கல்வெட்டுகளை சென்னைக்கு இடமாற்றம் செய்ய உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, தமிழ் சார்ந்த கல்வெட்டுகள் அனைத்தும் இனி தமிழகத்திற்கே இடமாற்றம் செய்ய வேண்டும் என்றும் இந்திய தொல்லியல்துறை ஆணை பிறப்பித்துள்ளது.

மேலும் இதுவரை துணைக் கல்வெட்டு கண்காணிப்பாளர்கள் அலுவலகம் தென்சரகம் என்று அழைக்கப்பட்டு வந்த நிலையில், இனி ‘தமிழ்க் கல்வெட்டுகள் துணை கண்காணிப்பாளர்கள் அலுவலகம்’ என அழைக்கப்படும் என்றும் தொல்லியல்துறையின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரை நூற்றாண்டுக் கனவு நினைவாகிறது என சு.வெங்கடேசன் எம்பி இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளார்.