tamilnadu

img

பட்டா கிடைக்க நடவடிக்கை எடுப்பேன்: பிரச்சாரத்தில் டி.ஆர்.பாலு வாக்குறுதி

அம்பத்தூர், ஏப். 10-திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திருப்பெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலு அம்பத்தூர் பகுதியில் லெனின்நகர், ராம்நகர், ஒரகடம், விஜயலட்சுமிபுரம், மேனாம்பேடு, கள்ளிக்குப்பம், வெங்கடாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் புதனன்று (ஏப். 10) வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அம்பத்தூர் பகுதியில் கிடப்பில் போடப்பட்டுள்ள பாதாள சாக்கடை திட்டத்தை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுப்பேன், திருமங்கலம் முதல் ஆவடி வரை மெட்ரோ ரயில் சேவை தொடர நடவடிக்கை எடுக்கப்படும். குடிநீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். மெட்ரோ வாட்டர் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கப்படும், அம்பத்தூர் ரயில் நிலையம் அருகே சுரங்கப்பாதை அமைக்கப்படும், ஆண்கள் மேல்நிலைப்பள்ளி அமைக்கப்படும், பட்டா கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.இதில் தொகுதி செயலாளர்கள் ஜோசப்சாமுவேல், டி.எஸ்.பி.ராஜகோபால், காங்கிரஸ் கட்சியின் மாவட்டத் தலைவர் மகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தொகுதி செயலாளர் சு.பால்சாமி, சு.லெனின்சுந்தர், கே.ரவிச்சந்திரன், பாக்கியம்பிள்ளை, வீரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் பி.மாரியப்பன், தொகுதி செயலாளர் மனோகரன், மதிமுக தொகுதி பொறுப்பாளர் தாமோதரன், விசிக தொகுதி செயலாளர் இப்ராகிம் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

;