tamilnadu

img

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கருத்தரங்கம்

தமிழ்நாடு அனைத்து ஓய்வூதியர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் புதனன்று (டிச 18) சென்னையில் “ஓய்வூதியர்: அரசுகளின் அணுகுமுறைகள்” எனும் தலைப்பில் கருத்தரங்கம் நடைபெற்றது. சென்னை மாவட்டத் தலைவர பி.ஏபெல் தலைமையில் நடைபெற்ற இக்கருத்தரங்கில் கூட்டமைப்பின் மாநில துணைத்தலைவர் பி.சுகுமாறன், மின்வாரி ஓய்வுபெற்றோர் நல அமைப்பின் பொதுச் செயலாளர் எஸ்.ஜெகதீசன் மற்றும் ஓய்வுபெற்றோர் சங்கத் தலைவர்கள் ஜோதி (அரசுஊழியர்) ஏ.ரைமண்ட் (போக்குவரத்து), கே.பூபாலன் (ஆசிரியர்), என்.பரமச்சந்திரன் (குடிநீர்), கூட்டமைப்பின் மாவட்டச் செயலாளர் என்.கிருஷ்ணமூர்த்தி, பொருளாளர் ஏ.முத்துக்குமார் உள்ளிட்டோர் பேசினர்.