சென்னை:
வரும் சட்டமன்ற தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு அளிப்பதாக காடுவெட்டி குருவின் மகன் அறிவித்துள்ளார்.
பாமகவின் தலைவர்களில் ஒருவராகவும், வன்னியர் சங்கத் தலைவராகவும் இருந்த காடுவெட்டி குரு, தற்போது, மாவீரன் மஞ்சள் படை என்ற அமைப்பை உருவாக்கி கனலரசன் செயல்பட்டு வருகிறார்.இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலினை அவரது இல்லத்தில் கனலரசன் சந்தித்துப் பேசினார்.இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கனலரசன், “பாமகவினர் எங்களை திமுகவிடம் பணம் பெற்றுக் கொண்டு செயல்படுவதாக குற்றம் சாட்டுகின்றனர். ஆனால் பாமக தான் பெட்டியை வாங்கிக் கொண்டு அங்கும் இங்கும் சென்று கொண்டிருக்கிறார்கள்” என்றார்.தேர்தலில் நிற்பது குறித்து பின்னர் தெரிவிப்போம். பாமக இருக்கும் கூட்டணியில் மாவீரன் மஞ்சள் படை இடம்பெறாது என்றும் குருவின் மகன் தெரிவித்தார்.