ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் வடசென்னை மாவட்ட குழு சார்பில் 7லட்சம் ரூபாய் மதிப்புள்ள நிவாரணப் பொருட்கள் 740 பேருக்கு வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாநில துணைத்தலைவர் மாரியப்பன், வட சென்னை மாவட்டத் தலைவர் ஜெயச்சந்திரன், செயலாளர் கி. ராதை நிர்வாகிகள் செல்வகுமாரி, முரளி நாகராஜன், ராஜேந்திரன், நாகேஷ், காமாட்சி, சசிகுமார், பாலாஜி உள்ளிட்டோர் பொருட்களை வழங்கினர்.