சென்னை ஏப். 30 - சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஆண்டு தோறும் மே மாதம் கோடை விடுமுறை விடுவது வழக்கம். அதன்படி வரும் மே 1- ஆம் தேதி முதல் ஜூன் 2 வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் மே 8, 9 தேதிகளில் நீதிபதிகள் ஏ.டி. ஜெக தீஷ்சந்திரா, கே. குமரேஷ்பாபு, ஆர். கலைமதி ஆகியோரும், 15, 16 தேதி களில் நீதிபதிகள் பி.டி. ஆஷா, ஆர். சக்திவேல், என். செந்தில்குமார், 22, 23 ஆம் தேதிகளில் நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன், சி. சரவணன், பி.பி.பாலாஜி, 29, 30 ஆம் தேதிகளில் நீதிபதி கள் ஆர். மகாதேவன், ஜெ. சத்யநாரா யண பிரசாத், எஸ். சவுந்தர், வி. லட்சுமி நாராயணன் ஆகியோரும் அவசர வழக்குகளை விசாரிப்பார்கள்.
இதேபோல உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மே 8, 9 ஆம் தேதிகளில் நீதிபதி கள் பி. வேல்முருகன், அப்துல் குத்தூஸ், பி. தனபால், 15,16 தேதிகளில் பி. வேல் முருகன், பி. வடமலை, கே. ராஜ சேகர் ஆகியோரும், 22, 23 தேதிகளில் நீதிபதிகள் ஆர்.என். மஞ்சுளா, எஸ். ஸ்ரீமதி, சி. குமரப்பன், 29, 30 தேதி களில் நீதிபதிகள் ஆர். விஜயகுமார், எல். விக்டோரியா கவுரி, ஜி. அருள்முரு கன் ஆகியோர் அவசர வழக்கு களை விசாரிப்பார்கள். வாரம்தோறும் திங்கள், செவ்வாய்க் கிழமைகளில் வழக்குகளை தாக்கல் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.