tamilnadu

img

காத்திருக்கும் போராட்டம் நடத்திய கரும்பு விவசாயிகள் கைது ....

சென்னை:
பணபாக்கியை வழங்கக்கோரி திருவண்ணாமலை ஆட்சியர் அலுவலகம் முன்பு கரும்பு விவசாயிகளின் காத்திருக்கும் போராட்டம்அக்டோபர் 28 அன்று  துவங்கி யது. காவல்துறை அதிகாரி அண்ணாமலை விவசாய சங்க நிர்வாகிகளை மாவட்ட ஆட்சியரிடம் அழைத்துச் சென்றார்.

உங்களிடம் பேச்சை எப்படிதுவங்குவது என்று தெரியவில்லை . ஒரு வாரம் கழித்து பார்க்கலாம் என கூறிவிட்டார்.கரும்பு விவசாயிகள் கரும்பு பண பாக்கியை பெறாமல்போவதில்லை என்று  போராட்ட த்தை துவங்கினர்.அமைதியான முறையில் காத்திருக்கும் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கரும்பு விவசாயிகளை தரதரவென இழுத்தும் கழுத்தைப் பிடித்து தள்ளி விவசாயிகளை கைது செய்த காவல்துறையினரின் அராஜகச்செயலை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலக்குழு வன்மையாகக் கண்டித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலப் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

அக்டோபர் 8 அன்று ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மாவட்ட ஆட்சியர் பேசும் போது, அக்டோபர் 20 ஆம் தேதிக்குள் கரும்பு பண பாக்கியை தருவதாக கூறியுள்ளனர். இந்த முறை பணம் கிடைக்கும் என்று ஆட்சியர் கூறியதை விவசாயிகள் நம்பினர். வாக்குறுதிப்படி பணத்தை தரணி சர்க்கரை ஆலை தராததால் அக்டோபர் 27 ஆம் தேதி முதல் காத்திருக்கும் போராட்டத் தை தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கரும்பு விவசாயிகள் துவக்கினர்.கரும்பு கட்டுப்பாடு சட்டம் 1966இன்படி சட்டப்படி 14 நாட்களில்கரும்பு பணத்தை விவசாயிகளுக்கு சர்க்கரை ஆலை கொடுத்திருக்க வேண்டும். மாநில அரசு‌ சட்டப்படி நடவடிக்கை எடுத்து விவசாயி களுக்கு பணத்தை பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.
இதை செய்யாமல் கரும்பை கொடுத்து விட்டு பணத்தை கேட்டுமூன்று ஆண்டுகளாக பெரும் சிரமங்களை சந்தித்து வரும் கரும்புவிவசாயிகளை தரதரவென இழுத்து கைது செய்து காவல்துறையினர் வீரத்தை விவசாயிகளிடம் காட்டியுள்ளனர்.50 விவசாயிகளை கைது செய்தனர்.

ஏமாற்றும் ஆலை உரிமையாளர்
மூன்று ஆண்டுகளாக கரும்பு பண பாக்கியை தராமல் ஏமாற்றும் தரணி ஆலை உரிமையாளர் பெரியசாமி மீது மாநில அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதேபோல் விவசாயிகளுக்கு கரும்பு பணத்தை தராமல் மோசடி செய்த அம்பிகா சர்க்கரை ஆலை முதலாளி ராம் தியாகராஜன் மீதும் மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை.

முதல்வர் தலையிட வேண்டும்
இப்பிரச்சனையில் மாநில முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலையிட்டு, திருவண்ணாமலை மாவட்டம், போளூர், தென்காசி மாவட்டம் வாசுதேவநல்லூர், கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஆகிய மூன்று தரணி சர்க்கரை ஆலைகள் ரூ.75 கோடி கரும்பு பண பாக்கி வைத்துள்ளன. இந்த பாக்கியை முதலமைச்சர்  பெற்றுத் தர வேண்டும். இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.