tamilnadu

img

வேள்பாரி நாவலுக்காக சு.வெங்கடேசனுக்கு இயற்றமிழ் வித்தகர் விருது

சென்னை:
நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் சார்பில், இந்த ஆண்டு இயற்றமிழ் வித்தகர் விருது, ‘காவல்கோட்டம்’ எனும் காவியத்தை எழுதி, சாகித்ய அகாதமி விருதுபெற்றவரும்,  ‘வேள்பாரி’ எனும் உன்னத தமிழ்க் காவியத்தை எழுதியவரும், மதுரை நாடாளுமன்ற உறுப்பினருமான சு.வெங்கடேசனுக்கு நெல்லை பைந்தமிழ் மன்றத்தின் தலைவர் வைகோ வழங்குகிறார்.இவ்விழா செப்டம்பர் 7 ஆம் நாள் மாலை 5 மணி அளவில் எழும்பூர் சிராஜ் மகாலில் நடைபெறுகிறது. விழாவுக்கு பைந்தமிழ் மன்றத்தின் புரவலர் பஹ்தூர் ரப்பானி அவர்கள் முன்னிலை ஏற்கிறார். பைந்தமிழ் மன்றத்தின் செயலாளர், வரலாற்று ஆய்வாளர் செ.திவான் வரவேற்புரையாற்றுகிறார். மன்றத்தின் பொருளாளர் குட்டி (எ) சண்முகசிதம்பரம் நன்றியுரையாற்றுகிறார். மன்றத்தின் துணைத் தலைவரும், எழுத்தாளருமான மதுரா மற்றும் தமிழ் அறிஞர்களும் வாழ்த்துரை வழங்குகின்றனர்.

;