சென்னை,மே 9- இந்திய அளவிலான விஐடி பொறியியல் நுழைவுத் தேர்வு 2019 (ஏஐகூநுநுநு 2019) ஏப்ரல் 10 ஆம் தேதி முதல்21 ஆம் தேதி வரை நடைபெற்றது. நாடு முழுவதிலிருந்து சுமார் ஒரு லட்சத்து 62 ஆயிரம் மாணவமாணவிகள் இந்த நுழைவுத் தேர்வை எழுதினர்.மாணவர் சேர்க்கைக்கான முதல் கட்டகலந்தாய்வு வியாழனன்று (மே 9) விஐடி சென்னை, விஐடி வேலூர், விஐடி போபால் மற்றும் விஐடி அமராவதி வளாகங்களில் ஒருங்கே தொடங்கியது. மதிப்பெண் தரவரிசையில் முதல் 10000 மாணவ, மாணவிகள் முதல் கட்ட கலந்தாய்வில் கலந்துகொண்டனர்.விஐடி துணைத்தலைவர் ஜி.வி.செல்வம் மாணவர் சேர்க்கைக்கான முதலாவதுஅனுமதி கடிதத்தை மாணவி நந்தினி சிறீகாந்த்துக்கு(பயோ-டெக்னாலாஜி) வழங்கி மாணவர் சேர்க்கையை துவங்கி வைத்தார். முனைவர் என்.சம்பந்தம் (இணைதுணைவேந்தர், விஐடி சென்னை) முனைவர் வி.எஸ்.காஞ்சனாபாஸ்கரன் (டீன், கல்வி),முனைவர் பி.கேமனோகரன் (கூடுதல் பதிவாளர், விஐடி சென்னை) முனைவர்டி. பழனிராஜன் (உதவி இயக்குனர், மாணவர் சேர்க்கை) ஆகியோர் உடனிருந்தனர்.மாணவர் சேர்க்கைக்கான கடிதத்தை பெற்றுக் கொண்ட மாணவி நந்தினி சிறீகாந்த் (96வது ரேங்க்) பயோ-டெக்னாலாஜி பிரிவைத் தேர்வு செய்துள்ளார். மரபணு மாற்றங்களின் மூலம் மனிதனின் நோய்களைக் குணமாக்குவதற்கான வழி முறைகளைக் கண்டுபிடிக்க வேண்டும் என்ற உந்துதல் காரணமாகவே இந்தப் பாடப்பிரிவைத் தேர்வு செய்ததாக அவர் கூறினார்.