tamilnadu

மாணவர் சேர்க்கை ஆயத்தப்பணிகள் பள்ளிக் கல்வித்துறை உத்தரவு

சென்னை, மார்ச் 17- கொரோனா விடுமுறையில் மாணவர் சேர்க்கைக்கான ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள ஆசிரியர்களுக்கு பள்ளிக்  கல்வித்துறை ஆணையர் உத்தர விட்டுள்ளார். தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி களுக்கு மார்ச் 31ஆம் தேதி வரை கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து வகை பள்ளிகளில் எல்.கே.ஜி.  முதல் 9ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்க ளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தா லும், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்க ளுக்கு விடுமுறை அறிவிக்கப்படவில்லை. மாணவர்களுக்கு மட்டுமே விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்பதால், ஆசிரியர்கள், பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தர விட்டுள்ளார். வரும் மார்ச் 31ஆம் தேதி வரை மாண வர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருப்ப தால் அதுவரை பணிக்கு வரும் ஆசிரியர்கள் வரும் கல்வியாண்டுக்கான (2020 - 2021) மாணவர் சேர்க்கையை மேற்கொள்ளும் வகையில் ஆயத்தப் பணிகளை மேற்கொள்ள பள்ளிக் கல்வித்துறை ஆணை யர் உத்தரவிட்டுள்ளார். மேலும் வருடாந்திர திட்டத்தை தயா ரித்தல், கால அட்டவணை தயாரித்தல், தீக் ஷா  செயலியில் இருந்து கியூ ஆர் குறியீடு மூலம் பாடங்களை பதிவிறக்கம் செய்தல், ஆங்கில பேச்சுப் பயிற்சி வகுப்புக்குரிய மாதிரிகளை உருவாக்குதல் உள்ளிட்ட பணிகளையும் மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை ஆணையர் சிஜி தாமஸ் வைத்யன் உத்தரவிட்டுள்ளார். உத்தரவுகளை முழுமையாக பின்பற்றிட  தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களுக்கு உரிய அறிவுறுத்தலை வழங்குமாறும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் ஆணையர் உத்தர விட்டுள்ளார்.