மக்கள் விரோத பட்ஜெட்டை கண்டித்து சிபிஎம்,சிபிஐ,சிபிஐ எம்எல் உள்ளிட்ட இடதுசாரி கட்சிகள் சார்பில் காஞ்சிபுரம் காந்தி சாலையில் நடைபெற்ற போராட்டத்திற்கு சிபிஎம் மாவட்டச் செயலாளர் இ.சங்கர் தலைமை தாங்கினார். மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கண்ணன், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் இ.முத்துக்குமார், மோகனன்,சி.சங்கர், பாஸ்கரன்,மாவட்டக்குழு உறுப்பினர்கள் ஆர்.சௌந்தரி, டி.பிரேமா, வி.ஜெயந்தி, எ.வாசுதேவன்,கே.நேரு, பி.ரமேஷ், சிபிஐ மாவட்ட செயலாளர் எல்.மேகநாதன், சிபிஐஎம்எல் மாவட்டக்குழு உறுப்பினர் ஜான் பால் உட்பட பலர் கலந்து கொண்டனர்.