tamilnadu

நீதியை வென்றெடுத்த வாச்சாத்தி மக்கள்

தமிழகத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) ஒடுக்கப்பட்ட மக்களுக்காக பல சட்டப் போராட்டங்களை முன்னின்று நடத்தியுள்ளது. வாச்சாத்தி பழங்குடி மக்களு க்கான போராட்டம் அவற்றுள் ஒரு மைல்கல்!  வாச்சாத்தி மக்களின், குறிப்பாக அப்பெண் களின் உறுதியும் நெஞ்சுரமும் இவ்வெற்றிக்கு வித்திட்டன என்பதுதான் உண்மை! தங்களை மீறியதற்கு பாடம் புகட்டுவதற்காக... ஆளும் கட்சியினர், வனம் மற்றும் காவல் துறையினர் சித்தேரி மலைத்தொடரில் சந்தன மர கடத்தலில் ஈடுபடுவதும், வெட்டிய மரங்களை எடுத்துச் செல்ல கிராம மக்களை பயன்படுத்துவதும் வாடிக்கை. கடத்தலில் ஈடுபட்ட ஒருவனை பிடித்து அம்மக்கள் வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். தங்களை மீறி செயல்பட்டு தங்களையே அம்மக்கள் காட்டிக்கொடுப்பதற்கு முன் அவர்களுக்கு பாடம்  புகட்ட வேண்டும் என்று எண்ணிய வனத்துறை யினர், காவல் மற்றும் வருவாய் துறையினருடன் சேர்ந்து அரங்கேற்றிய கொடூரத் தாக்குதல்தான் 1992 ஜூன் 20-22 வாச்சாத்தி சம்பவம். மலைவாழ் மக்கள் சங்கத்தின் தலைவர் பாஷாஜான், அதன் சித்தேரி மலை கமிட்டி செயலாளர் பொன்னுசாமி ஆகிய தோழர்கள் மறைந்த தோழர் அரூர் அண்ணாமலையின் உதவியுடன் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து, நடந்த விவரங்களை சேகரித்து, அவர்கள் நீதி பெறுவதற்காக துவங்கிய இப்போராட்டம் பல பரிமாணங்களை பெற்றது! உச்சநீதிமன்றத்தில்... மலைவாழ் மக்கள் சங்கம் நீதி விசாரணை கோரி மாவட்ட அதிகாரிகளுக்கு அளித்த மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. பொது நல வழக்காக விசாரிக்கக் கோரி சென்னை உயர்நீதி மன்றத்தில் அளிக்கப்பட்ட மனுவும் ஏற்கப்பட வில்லை. வாச்சத்தி மக்களை நேரில் சந்தித்து  விவரங்களை அறிந்திருந்த தோழர் ஏ.நல்ல சிவன் (கட்சியின் அப்போதைய மாநிலச் செயலா ளர், மாநிலங்களவை உறுப்பினர்) உச்சநீதி மன்றத்தில் நேரிடையாக ரிட் மனு தாக்கல் செய்தார். பாரிஸ்டரும் அகில இந்திய வழக்கறி ஞர்கள் சங்கத்தின் ஸ்தாபக பொதுச்செயலாள ருமான தோழர் ஹர் தேவ் சிங் இவ்வழக்கை தாக்கல் செய்தார்.  உச்சநீதிமன்றம் 8.9.1992 அன்று சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கை விரைவில் விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. அரசு  மற்றும் வனம், காவல், வருவாய் துறைகள் பழங்குடியினர் கூறும் சம்பவங்களே நடைபெற வில்லை என்று ஒட்டுமொத்தமாக மறுத்தன. 22.8.1992 அன்று 18 பெண்கள் தங்களை பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரி அளித்த புகார்மீது காவல்துறை இன்றுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாறாக, அவர்க ளோடு சேர்த்து மொத்தம் 96 பெண்கள் மற்றும் 10 ஆண்கள் மீது வனத்துறை குற்றங்களுக்காக வும், தங்களை பணி செய்யவிடாமல் தடுத்ததாக வும், கலவரம் செய்ததாகவும், கொலை செய்ய முயற்சித்ததாகவும் பொய் வழக்குகளை (20.6.1992 தேதியிட்ட முதல் தகவல் அறிக்கை 970/1992, அரூர் காவல் நிலையம்) பதிவு செய்தனர். 04.05.1994 அன்று இவ்வழக்கில் குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது.  தீர்ப்பைப் பெற பக்கபலமாய் இருந்தவை நமது ரிட் மனுவில் சி.பி.ஐ விசாரணை கோரவில்லை என்றாலும், அரசுத்துறைகள் அனைத்தும் சம்பவங்கள் நடந்ததை தொடர்ந்து மறுத்ததால் 24.02.1995 அன்று நீதிபதி அப்துல் ஹாதி அவர்கள் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தர விட்டார். இத்தீர்ப்பை பெற பக்கபலமாக இருந்தவை (1) கட்சியின் சார்பில் தோழர்கள் ஏ.நல்லசிவன், ஜி.வீரையன், கே.வரதராசன், மைதிலி சிவராமன், அரூர் அண்ணாமலை ஆகியோர் நேரில் சென்று பதிவு செய்த அறிக்கை, (2)அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் சார்பில் தோழர்கள் பாப்பா உமாநாத், மைதிலி சிவராமன், பங்கஜவல்லி  ஆகியோர் நேரில் சென்று பதிவு செய்த அறிக்கை, (3)அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தின் மனுவை ஏற்று எஸ்.சி/ எஸ்.டி ஆணை யர் திருமதி பாமதி ஐ.ஏ.எஸ். நேரில் சென்று  பதிவு செய்த அறிக்கை, (4) தமிழ் நாடு மலை வாழ் மக்கள் சங்கம் சார்பில் தோழர்கள் பாஷாஜான், பெ.சண்முகம் ஆகியோர் நேரில் சென்று பதிவு செய்த அறிக்கை.   சி.பி.ஐ 23.03.1995 அன்று முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, 23.04.1996 அன்று குற்ற பத்திரிக்கையும் தாக்கல் செய்தது. அதில்  269 பேர் (1-155 வனத்துறையினர், 156-263 காவல் துறையினர் மற்றும் 264-269 வருவாய்துறையினர்) குற்றவாளிகள் என்று பட்டியலிட்டது.  பாதுகாப்புக்காக மாஜிஸ்ட்ரேட்டே நீதிமன்றம் நாடும் நிலை மாவட்ட அமர்வு நீதிமன்றம் இவ்வழக்கை விசாரணைக்கு எடுக்க எவ்வளவு கால தாமதம் செய்ய முடியுமோ அவ்வளவையும் குற்றம் சாட்டப்பட்ட அரசுத்துறையினர் மேற்கொண்டா ர்கள். சிறப்பு அரசு வழக்கறிஞர் நியமனம், சாட்சிகள் நீதிமன்றம் செல்வதற்கான படி, குற்றவாளிகளைக்கண்டு பிடிக்க தேவையான அடையாள அணிவகுப்பு நடத்துவது ஆகிய  அனைத்திற்கும் நீதிமன்றத்தை நாடவேண்டி யிருந்தது. வாச்சாத்தி மக்கள் குற்றவாளிகளால் மிரட்டப்பட்டனர். அடையாள அணிவகுப்பு நடத்த  வேண்டிய மாஜிஸ்ட்ரேட் தன்னுடைய பாது காப்பிற்கு உயர்நீதி மன்றத்தை நாடவேண்டியிருந்தது. சம்பவங்கள் நடந்து 19 வருடங்களுக்குப்பின் 29.9.2011 அன்று குற்றம் சாட்டப்பட்ட அரசுத்துறை யினர் அனைவருமே குற்றவாளிகள் என்று தீர்ப்பு  வழங்கப்பட்டது. அன்று பாலியல் வல்லுறவுக் குற்றம் இழைத்த 17 குற்றவாளிகள் மட்டும், 19 வருடங்களுக்குப்பின் முதல் முறையாக சிறை யிடப்பட்டார்கள். 269 பேரில் உயிரோடு இருந்த 215 பேரின் மேல் முறையீடுகளை சென்னை உயர்நீதி மன்றம் 29.9.2023 அன்று தள்ளுபடி செய்தது. இன்னும் அவர்கள் உச்சநீதி மன்றம் செல்ல வாய்ப்பு உள்ளது. முரண்சாட்சியமும்  பிறழ்சாட்சியும் இல்லை மனதிலும் உடலிலும் காயங்களை சுமந்த அப்பழங்குடி மக்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கட்சியின் துணையோடு ஆதிக்க சக்தி களை எதிர்த்து நடத்திய தீரம் மிக்க போராட்டம், அநீதியை எதிர்த்து போராடும் அனைவருக்கும் உத்வேகம் அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. பல வழக்குகளில் முரண் சாட்சியம் என்ற கார ணத்தால் நீதி கிடைக்காமல் போவதுண்டு. 75 சாட்சிகள், 324 சான்றாவணங்கள் கொண்ட இவ்வழக்கில் எந்த முரண் சாட்சியமும் இல்லை பிறழ் சாட்சியும் இல்லை. ஏனென்றால் அவர் களின் சாட்சியங்கள் அனைத்தும் உண்மை! எனினும், உண்மை வெளிவர, நீதி கிடைக்க 19 வருடங்களும், அதை உயர் நீதிமன்றம் உறுதிப்படுத்த அதற்குமேல் 12 வருடங்களும் ஆக 31 வருடங்கள் அப்பழங்குடி மக்கள் காத்தி ருக்க வேண்டிய அவல நிலை! 20 வருடங்கள் கழித்து, 15.11.2012 அன்று சென்னை உயர்நீதி மன்றம் வாச்சாத்தி மக்கள் மீது வனத்துறையினர் தொடுத்த பொய் வழக்குகளை ரத்து செய்தது. நிர்பயா வழக்கும் வாச்சாத்தி வழக்கும் நிர்பயா வழக்கில், மூன்று மாதங்களுக்குள் கமிஷன் அமைத்து, குற்றவியல் சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வர முடியும் என்று சாதித்த அரசு இயந்திரங்கள் வாச்சாத்தி வழக்கில் என்ன செய்து கொண்டிருந்தன? அதிலும் பட்டிய லின, பழங்குடி மக்கள் (வன்கொடுமை தடுப்பு) சட்டம் 1989 லிருந்தே அமுலில் இருக்கும்போது, புதிதாக சட்டம் இயற்ற வேண்டிய அவசியம் கூட  எழவில்லை. 31 வருடங்களாக வடுக்களை சுமந்து, நீதியை நிலைநாட்ட போராடிய அம்மக்க ளை அரசுகளும் ஆளும் கட்சிகளும் கண்டு கொள்ளவேயில்லை. மாறாக, அரசு இயந்திரத்தைச் சேர்ந்த குற்றவாளிகளை முனைப்புடன் பாதுகாத்தனர். பாதிக்கப்பட்ட மக்க ளுக்கு சட்டப்படி தரவேண்டிய இழப்பீட்டைக் கூட தாமாக தர முன்வரவில்லை. அதற்கும் வழக்குப் போடவேண்டியிருந்தது.  மனதளவிலான துன்பங்களுக்கு இழப்பீடு கணக்கிட முடியுமா? பாதிக்கப்பட்ட ஒவ்வொரு பெண்ணும் தன்னுடைய கண்ணியத்தை நிலை நாட்ட, தாங்கள் பொய் சொல்லவில்லை என்று நிரூபிக்க பல பத்தாண்டுகளாக அனுபவித்துவரும் மனதளவி லான துன்பங்களுக்கு இழப்பீட்டை இந்த அரசும் நீதித்துறையும் கணக்கிட முடியுமா?  ஆளும் வர்க்கங்கள் யார் பக்கம் என்பது நிதர்சனமான உண்மை. தாழ்த்தப்பட்ட, பழங்குடியின, விளிம்புநிலை மக்களுக்கு அவர் களுக்கான பிரத்தியேக சட்டங்களும் துணை நிற்பதில்லை. எனவேதான்,  நிர்பயாவுக்கு ஒரு நீதி,  வாச்சாத்தி பெண்களுக்கு ஒரு நீதி! நிர்பயா வுக்கு நீதி கிடைத்ததை வரவேற்போம். ஆனால்  பழங்குடி பெண்கள் என்பதாலும், அதிலும் குற்ற வாளிகள் அரசுத்துறையினர் என்பதாலும் சட்டங் களும் நீதித்துறையும் அரசுகளும் குற்றவாளி களுக்கு சாதகமாகச் செயல்பட்டதை மறுக்க முடியாது. வன்கொடுமை தடுப்புச் சட்டம் ஏட்டள வில் மட்டும்தான். பொதுவாக, அச்சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தண்டிக்கப்படுவது மிகவும் அபூர்வம்.  வாச்சாத்தி மக்களுக்கு நீதி கிடைத்தது என்று சொல்வதைவிட  தங்களின் சற்றும் சளைக்காத போரட்டத்தால் அவர்கள் நீதியை நிலைநாட்டியுள்ளனர் என்பதே உண்மை! அதிகார வர்க்கத்திற்கு எதிரான போரட்டத்தில் அவர்களோடு தோளோடு தோள் நின்ற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) வாச்சாத்தி மக்களை புடம் போட்ட போராளிகளாக வார்த்தெடுத்துள்ளது!