சென்னை:
திமுக அணியில் கொள்கை புரிதல் உள்ளதால் ஒருபோதும் குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.திருமாவளன் மீதான வழக்கை கண்டித்தும், சமூக வலைதளங்களில் அவதூறு பரப்புவோரை கைது செய்ய வலியுறுத்தியும் சென்னையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்டு திருமாவளவன் பேசுகையில், “திமுக கூட்டணியை பலவீனப்படுத்த வேண்டும் என்பதற்காக ஒரு மாதத்திற்கு முன்பு பேசியதை வெட்டி ஒட்டி அவதூறு பரப்புகின்றனர்” என்றார்.
திமுக தலைவர் ஏன் இதனை கண்டிக்க வில்லை என்று கேட்கின்றனர். இவர்களின் உள்நோக்கம் அனைவருக்கும் தெரியும். திமுக அணியில் உள்ள கட்சிகள் கொள்கை புரிதல் உள் ளவை. அங்கு குழப்பத்தை ஏற்படுத்த முடியாது என்றும் அவர் கூறினார்.ஆன்லைனில் கொடுக்கப்பட்ட புகாரை ஆராயாமல் காவல்துறை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவதூறு பரப்புகிறவர்கள் மீது 100க்கும் மேற்பட்ட புகார் கொடுத்துள் ளோம். அதன்மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது. எத்தனை வழக்கு வந்தாலும் மநுஸ்மிருதிக்கு எதிரான போராட் டம் தொடரும் என்றும் திருமாவளவன் கூறினார்.தமிழகத்தில் ராமசாமி இருப்பதால் ராமர் அரசியல் எடுபடவில்லை. இப்போது தமிழ்கடவுளான முருகனை வைத்து அரசியல் செய்ய முயற்சிக் கின்றனர். அறுபடை வீடு என்றழைக்கப் படும் முருகன் கோவில்கள் அனைத்திலும் தமிழில் வழிபாடு நடத்த வலியுறுத்துவார்களா? என்றும் கேள்வி எழுப்பினார்.
நீதிமன்றங்களில் மநு...
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு உறுப்பினர் கே.சாமுவேல்ராஜ் பேசுகையில், மநு(அ)நீதி இன்றுவரை பொது மக்களின் வாழ்க்கை மீது யுத்தம் நடத்திக் கொண்டிருக்கிறது” என்றார்.மநு எங்கே வாழ்கிறார் என்றால் உச்சநீதி, உயர்நீதிமன்றங்களில் வாழ் கிறார். உச்ச, உயர்நீதிமன்ற தீர்ப்புகள் குறித்த நடத்தப்பட்ட ஒரு ஆய்வில், 1950லிருந்து 2020 வரையில் 38 தீர்ப்புகள் மநுநீதியை ஆதாரமாக காட்டி தீர்ப்பு வழங்கியுள்ளனர். கடந்த 10 ஆண்டுகளில் மட்டும் 28 தீர்ப்புகளை வழங்கியுள்ளனர் என்றும் அவர் கூறினார்.2012 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில் 5 வயதுக்குட்பட்ட 2.50 லட் சம் குழந்தைகள் விதவையாக உள்ளனர் என்கிறது. எனவே மநு என்பது பழங்கதை அல்ல. மார்க்ஸ் கூறுவதுபோல், இறந்துபோனவர்களின் சிந்தனை மரபு, உயிரோடு வாழ்பவர்களின் மூளையை அழுக்கு பிசாசைபோல் அழுதிக் கொண்டிருக்கிறது என்பார். மநு 1800 ஆண்டுகளுக்கு முன்பு எழுதப்பட்டாலும், இன்றைக்கும் அரசு அதிகாரிகள், தலைவர்களின், நீதிபரிபாலனம் செய்யக்கூடியவர்களின் மூளையில் மநு அழுக்கு பிசாசாக வாழ்கிறது. மநுவுக்கு எதிரான உரையாடல், பெரும் போர் நடக்கிறது. மநுவை குழிதோண்டி புதைக்கும் வரை இந்த கருத்துக்கள போராட்டத்தில் தொடர்ந்து இயங்கி வரும் மார்க்சிஸ்ட் கட்சி உங்களுக்கு துணை நிற்கும் என்றும் அவர் கூறினார்.ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் துணைச் செயலாளர் மு.வீரபாண்டியன், விசிக பொதுச் செயலாளர்கள் து.ரவிக்குமார் எம்.பி., சிந்தனைச்செல்வன், பொருளாளர் முகமது யூசுப் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.