சென்னை, ஜூன் 24- வடசென்னை ஓட்டேரில் சாலை மறியலில் ஈடுபட்ட 100க்கும் மேற்பட்ட வாலி பர்களை காவல் துறையினர் கைது செய்தனர். கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவுக்கு காரணமான அனைவரை யும் கைது செய்து கடுமை யான நடவடிக்கை எடுக்க வேண்டும்,
தமிழ்நாட்டில் போதை பொருள் விற்பனை செய்பவர்கள் அதற்கு உடந்தையாக இருப்ப வர்களை இரும்புக் கரம் கொண்டு ஒடுக்க வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் வடசென்னை மாவட்டக் குழு சார்பில் சவப்பாடை கட்டிய ஆர்ப்பாட்டம் ஓட்டேரியில் திங்களன்று (ஜூன் 24) நடைபெற்றது. முன்னதாக ஓட்டேரி நியூ பேரன்ஸ் சாலையில் இருந்து மாவட்டத் தலை வர் நித்தியராஜ் தலைமை யில் பாடையுடன் ஊர்வல மாக புறப்பட்டனர். காவல் துறையினர் பாடையு டன் ஊர்வலமாக செல்லக் கூடாது என தடுத்து பாடையை பிடுங்கி னர்.
இதனால் காவல் துறை யினருக்கும் வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே வாக்கு வாதம் நடைபெற்றது. இதற்கி டையே ஒரு பகுதியினர் காவல் நிலையம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட னர். பின்னர் அங்கிருந்து ஓட்டேரி பாலம் வரை ஊர்வலமாக சென்றனர். அங்கு காவல் துறையினர் தடுப்பு அரண் அமைத்து தடுத்தனர். இதையடுத்து அங்கு மீண்டும் மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரம் சாலை மறி யல் நீடித்தது. பின்னர் காவல் துறையினர் அனை வரையும் கைது செய்தனர்.
இதில் மாவட்டச் செய லாளர் எல்.பி.சரவணத் தமிழன், மாநிலக் குழு உறுப்பினர் அபிராமி, மாவட்ட பொருளாளர் விஜய், மாவட்ட நிர்வாகிகள் முருகேசன், கார்த்தி, நீதிதேவன், திருவிக நகர் பகுதிச் செயலாளர் சுரேஷ்குமார் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.