tamilnadu

நகைக்கடையில் திருடிய ஊழியர்கள் கைது

சென்னை, ஏப். 4-


சென்னை தியாகராய நகர் பனகல் பூங்கா அருகே ஒரு நகைக் கடை உள்ளது. இந்த கடையில் அண்மையில் நகை இருப்பு, நகை விற்பனை குறித்து கணக்கு தணிக்கை செய்யப்பட்டது. அப்போது கடந்த 10 ஆண்டுகளில் சுமார் 250 சவரன் தங்க நகைகள் திருடப்பட்டிருப்பது தெரிய வந்தது.இதுகுறித்து அந்தக் கடை நிர்வாகம் மாம்பலம் காவல் நிலையத்தில் சில நாட்களுக்கு முன்பு புகார் செய்தது. புகாரின் அடிப்படையில் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து, விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்தகடையில் பழைய நகைகளை வாங்கி புதிய நகைகளாக மாற்றும் பிரிவில் பணிபுரியும் லியோ ஜான், அம்ஜித் ஆகியஇருவரும் இந்த திருட்டில் ஈடுபட்டவர்கள் என்பதும், 10 ஆண்டுகளாக இருவரும் சிறிது,சிறிதாக திருடியிருப்பதும் தெரிய வந்தது. இதையடுத்து காவல் துறையினர் லியோ ஜானையும், அம்ஜித்தையும் வியாழக்கிழமை கைது செய்து, அவர்களிடமிருந்து 150 சவரன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். 

;