சென்னை, மார்ச் 10- அலுவலகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக போராடும் நாம், பெண்களுக்கு எதிராக சமூகத் தில் நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட முன்வர வேண் டும் என்று தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில பொதுச்செயலா ளர் ஆ.செல்வம் அழைப்பு விடுத்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங் கத்தின் மகளிர் மாநில சிறப்பு மாநாடு மகளிர் துணைக்குழு மாநில ஒருங்கிணைப்பாளர் சி.பர மேஸ்வரி தலைமையில் சென்னை மாதவரத்தில் சனிக்கிழமை (மார்ச் 9) நடைபெற்றது.
இந்த மாநாட்டை நிறைவு செய்து ஆ.செல்வம் பேசுகையில், ஒன்றிய, மாநில அரசுத் துறைகளில் இன்று 50 விழுக்காட்டிற்கு மேல் பெண் ஊழியர்கள் வேலை செய்கிறார்கள். ஆனால் சுதந்திர மடைந்து 75 ஆண்டுகளுக்கு மேலாகியும் அரசு அலுவலகங்க ளில் பெண் ஊழியர்களுக்கு சுகாதாரமான கழிவறை வேண்டும் என்று போராட வேண்டிய அவல நிலை உள்ளது.
சத்துணவு ஊழியர் கோரிக்கைகளை நிறைவேற்றுக!
தமிழ்நாட்டில் மகளிருக்கு இலவச பேருந்து பயணம், மகளிர் உரிமைத் தொகை என பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது. அதை வரவேற்கிறோம். சத்துணவு ஊழியர்கள் உள்ளிட்டு பெண் ஊழியர்களுக்கான பல் வேறு கோரிக்கைகளை அரசு நிறை வேற்ற வேண்டும்.
கருணையால் அல்ல
விவசாயிகளின் வாழ்வதாரத் தைக் காக்க மிகப்பெரிய போராட்டம் தலைநகரில் நடைபெறுகிறது. அதில் பெண்கள் முன் வரிசையில் நின்று போராடுகிறார்கள். நாடாளு மன்றத்தில் அண்மையில் 33 விழுக்காடு இட ஒதுக்கீடு மசோதா கொண்டு வரப்பட்டது. இது பாஜக ஆட்சியின் கருணையால் அல்ல. ஆண்டுக்கணக்கில் போராடியதன் விளைவாகத்தான் என்பதையும், அதையும் அமல்படுத்த ஒன்றிய பாஜக அரசுக்கு மனமில்லை என்ப தையும் புரிந்துகொள்ள வேண்டும், இதனை சக ஊழியர்களிடம், குடி யிருப்பு பகுதிகளில் உள்ள பெண்க ளிடம் எடுத்துக்கூற வேண்டிய கடமையும் நம்முன் உள்ளது.
பெண்களுக்கு பாதுகாப்பில்லை
உலக வரலாற்றிலேயே மணிப் பூரில் பெண்களுக்கு நடைபெற்ற கொடூரம் போல் வேறு எங்கும் நடை பெற்றதில்லை. இதற்கு ஒன்றிய அரசின் தவறான அணுகுமுறை தான் காரணம். இவ்வளவு பெரிய ஜனநாயக நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. மக்கள் மனதுடன் பேசுகிறேன் (மன்கிபாத்) என்று கூறும் பிரதமர் மோடி பெண் களுக்கு இழைக்கப்படும் கொடு மைகள், அநீதிகள் குறித்து பேச மறுக்கிறார்.
அலுவலகங்களில் ஏற்படும் பிரச்சனைகளுக்காக போராடும் நாம், பெண்களுக்கு எதிராக சமூகத் தில் நடைபெறும் கொடுமைகளுக்கு எதிராகவும் போராட முன்வர வேண்டும். தேசத்தில் ஒட்டுமொத்த பொதுத்துறை நிறுவனங்களையும் தனியாரிடம் தாரை வார்க்கும் கால கட்டத்தில், தேசத்தையும் பொதுத் துறை நிறுவனங்களையும், அரசி யலமைப்பு சாசனத்தையும், ஜனநா யகத்தையும், பெண் உரிமைகளை யும் பாதுகாக்கும் வகையில் வரு கின்ற நாடாளுமன்றத் தேர்தலில் நம்முடைய பங்களிப்பு இருக்க வேண்டும் என்று ஆ.செல்வம் வேண்டுகோள் விடுத்தார்.