tamilnadu

img

200 குற்ற வழக்குகளில் தொடர்புடைய ரவுடிக்கு பாஜகவில் மாநில பதவி

சென்னை புறநகர் பகுதியான நெடுங்  குன்றத்தைச் சேர்ந்த ஆர்.கே.சூர்யா “ஏ பிளஸ்” ரவுடிகள் பட்டியலில் இருந்தவர். இவர் மீது 8 கொலை  வழக்குகள் உள்பட 200-க்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ள நிலையில், சில ஆண்டு களுக்கு முன்னர் குண் டர் சட்டத்தில் கைதாகி  காலில் மாவுக்கட்டு  போட்ட நிலையில் சிறையில் அடைக்கப்பட் டார். கடந்த 2020இல் சென்னை வண்டலூ ரில் அப்போதைய பாஜக தலைவர் எல்.முரு கன் தலைமையில் நடந்த கட்சிக் கூட்டத்  தின்போது, பாஜகவில் சேர ரவுடி ஆர்.கே. சூர்யா வந்திருந்தார். அப்போது ஆயுதங்களு டன் வந்த சூர்யாவின் கூட்டாளிகளை போலீ சார் கைது செய்திருந்த நிலையில், ஆர்.கே. சூர்யா தப்பிவிட்டார். இந்நிலையில், ஆர்.கே.சூர்யா புதனன்று  பாஜகவில் இணைந்துள்ளார். கட்சியில் இணைந்த உடனேயே ரவுடி ஆர்.கே.சூர்யா வுக்கு பாஜக பட்டியல் அணி மாநில செயலா ளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது மனை வியும் பாஜக மாவட்ட மகளிரணி தலைவியு மான விஜயலட்சுமி 2021இல் நெற்குன்றம் ஊராட்சி துணைத் தலைவராக பதவி ஏற்கும் போது கஞ்சா கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. “காவல்துறை நெருக்கடியால் நான்  பாஜகவில் சேரவில்லை. பிரதமர் மோடி,  அண்ணாமலையால் ஈர்க்கப்பட்டு பாஜக வில் இணைந்து, இப்போது பொறுப்பு பெற் றுள்ளேன். அண்ணாமலை சொன்னால், தேர்  தலிலும் போட்டியிடத் தயார்” என ஆர்.கே. சூர்யா ‘பயமுறுத்தி’யுள்ளார்.