போக்குவரத்து தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்த அறிவிப்பை வெளியிட்டதை தொடர்ந்து அக்டோபர் 22 வியாழனன்று சென்னை தேனாம்பேட்டையில் உள்ள தொழிலாளர் ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் லட்சுமிகாந்தன் முன்னிலையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. இதில் ஏ.ஆறுமுகநயினார் (சிஐடியு), கி.நடராசன் (தொமுச) உள்ளிட்ட 9 தொழிற்சங்கங்களின் தலைவர்கள், 8 போக்குவரத்துக்கழக அதிகாரிகள்கலந்து கொண்டனர்.