tamilnadu

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

மே 10-இல் எஸ்எஸ்எல்சி முடிவு
பிளஸ் 2 தேர்வு முடிவு;
மே 6இல் வெளியாகிறது!

சென்னை, ஏப்.29- தமிழ்நாட்டில் 12-ஆம் வகுப்பு (பிளஸ் 2) மாணவர் களுக்கான பொதுத்  தேர்வு மார்ச் 1 அன்று துவங்கி மார்ச் 22 வரையிலும், மார்ச் 4 அன்று துவங்கிய 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு 25-ஆம் தேதியும், மார்ச்  26 அன்று துவங்கிய 10-ஆம் வகுப்பு (எஸ்எஸ்எல்சி) பொதுத்தேர்வு ஏப்ரல் 8  அன்றும் நிறைவடைந்தன. இதனைத் தொடர்ந்து விடைத்தாள் திருத்தும் பணி  துவங்கப்பட்டு அண்மையில் நிறைவ டைந்தது. மதிப்பெண்களை கணினி யில் பதிவேற்றும் பணி தற்போது நடை பெற்று வருகிறது. இந்நிலையில் ஏற்க னவே அறிவித்தபடி, மே 6 மற்றும் மே 10-ஆம் தேதிகளில் முறையே 12-ஆம்  வகுப்பு, 10-ஆம் வகுப்புகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.

எச்.ராஜா மீதான 
வழக்கு: ரத்து செய்ய உயர்நீதிமன்றம் மறுப்பு

சென்னை, ஏப்.29- தமிழ்நாடு பாஜக  மூத்த தலைவர் எச்.ராஜா தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த 2018-ஆம்  ஆண்டு பெண்கள் குறித்து சர்ச்சைக்கு ரிய வகையில் கருத்துக்களை பதி விட்டார். இது தொடர்பாக முன்னாள் அமைச்சர் அந்தியூர் செல்வராஜ் உட்பட திமுக நிர்வாகிகள் ஈரோடு  மாவட்ட காவல்துறையில்  அளித்த புகாரின் பேரில், பெண்களுக்கு  எதிராக ஆபாசமாக பேசுதல், கல வரத்தை ஏற்படுத்தும் நோக்கில் செயல்  படுதல் உள்ளிட்ட சட்டப் பிரிவுகளின் கீழ் ஈரோடு நகர காவல்துறை வழக்கு பதிவு செய்தது.

இந்நிலையில், சிறப்பு நீதிமன்றத் தில் உள்ள வழக்கை ரத்து செய்யக்  கோரி மீண்டும் எச். ராஜா தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு திங்களன்று  (ஏப்.29) விசாரணைக்கு வந்தது. இதனை  விசாரித்த நீதிபதி ஜி.ஜெயசந்திரன், இந்த பதிவை பதிவிட்டது நீங்களா? என ராஜா தரப்புக்கு கேள்வி எழுப்பி னார். அதற்கு எச். ராஜா தரப்பில், ஆம்  என பதிலளிக்கப்பட்டது. இதையடுத்து,  எச். ராஜாவுக்கு எதிரான வழக்கை ரத்து  செய்ய மறுத்த நீதிபதி, விசாரணையை சந்திக்குமாறு உத்தரவிட்டார்.

நாளை மே தின கொண்டாட்டம்
மாநிலக் குழு அலுவலகத்தில் கே.பாலகிருஷ்ணன் கொடியேற்றுகிறார்!

சென்னை, ஏப்.29- தொழிலாளர்கள் 16 மணி நேரத்திற்கும் மேலாக முதலாளி களால் சுரண்டப்பட்ட காலம் ஒன்று இருந் தது. அதை எதிர்த்து பல ஆண்டுகள் போராடி, பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் உயிர்த் தியாகம் செய்து 8 மணி நேர உழைப்பு, 8 மணி நேர ஓய்வு, 8 மணி  நேர உறக்கம் என்று கொண்டு வந்ததன்  அடையாளம்தான் மே தினம். 

உழைக்கும் மக்களுக்கு உந்து சக்தி யை அளிப்பது மே தின விழா. நிகழ்கால  உரிமைகளுக்காகவும் எதிர்கால வாழ்வுக்காகவும் போராடும் மக்களுக்கு உத்வேகம் அளிக்கும் விழா தான் மே தினம். அந்த வகையில், 138-ஆவது மே  தினம் புதன்கிழமையன்று உலகம் முழு வதும் கொண்டாடப்பட உள்ளது.

இதனொரு பகுதியாக, சென்னையில்  உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின்  மாநிலக்குழு அலுவலகமான தோழர் பி. ராமமூர்த்தி நினைவகத்தில் காலை 8.30 மணிக்கு கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் செங்கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றுகிறார். இந்நிகழ்வில் தோழர்கள் திரளாக  பங்கேற்க வேண்டும் என்று கட்சியின் அலு வலகச் செயலாளர் வெ. ராஜசேகரன் கேட்டுக்கொண்டுள்ளார்.

மணல் குவாரி 
பணிகளை கவனிக்க தனித் துறை!
தமிழக அரசு முடிவு

சென்னை, ஏப்.29- தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு மணல் குவாரிகளில் அரசு நிர்ணயம் செய்ததை விட அதிக அளவில் மணல் அள்ளப்படு வதாக நீண்ட கால மாகவே குற்றச்சாட்டு இருந்து வருகிறது. இந்நிலையில், முறைகேடுகளைத் தடுக்கவும், மணல் குவாரி நடவடிக்கை களை கையாளவும் தனித் துறையை உரு வாக்க நீர்வளத்துறை முன் வந்துள்ளது.

இந்த புதிய துறைக்கு மணல் குவாரி மற்றும் கண் காணிப்பு கழகம் என்று  பெயர் சூட்டப் படும். தற்போது உள்ள  சுரங்கம் மற்றும் கண்காணிப்பு அலு வலகங்கள் பொறியியல் அமைப்பு அதி காரிகளின் கீழ் இந்த துறை செயல்படும்” என்று கூறப்படுகிறது.

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவங்கியது!

அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இலவச நீட் பயிற்சி துவங்கியது!

இந்த மையங்களில் பயிற்சி களை வழங்குவதற்காக இயற்பி யல், வேதியியல், தாவரவியல், விலங்கியல் என ஒவ்வொரு பாடத்திலும் சிறந்து விளங்கும் ஆசிரியர்கள் தேர்வு செய்யப்  பட்டு, அவர்கள் மூலம் பாடங்க ளுக்கான பயிற்சிகள் சுழற்சி முறையில் வழங்கப்பட்டு வரு கின்றன.

மாணவர்களுக்கு பயிற்சி  வகுப்புகள் போது காலைச்  சிற்றுண்டி, தேநீர் மற்றும் மதிய உணவு வழங்கப்படுகிறது. பயிற்சி மையங்கள் திங்கட்  கிழமை முதல் சனிக்கிழமை வரை காலை 9.15 முதல் மாலை  4.30 மணி வரை செயல்படு கின்றன. 

இந்நிலையில், பன்னிரண் டாம் வகுப்பு பொதுத் தேர்வு களுக்காக தற்காலிகமாக நிறுத்தி  வைக்கப்பட்டிருந்த நிலையில், இந்த பயிற்சி வகுப்புகள் தற்  போது மீண்டும் தொடங்கியுள்ளன.

மே 5 அன்று நடைபெற வுள்ள நீட் தேர்வுக்கு, தமிழ்நாட்  டில் உள்ள அரசு மற்றும் அரசு  உதவி பெறும் பள்ளிகளில் இருந்து 13 ஆயிரத்து 200  மாணவர்கள் விண்ணப்பித்துள் ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

உச்சநீதிமன்றத்தில் ராஜேஷ் தாஸ் அப்பீல்!
சென்னை, ஏப்.29- கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்  தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 

சென்னை, ஏப்.29- கடந்த 2021-ஆம் ஆண்டு பெண் எஸ்.பி.க்கு பாலியல் தொல்லை அளித்  தது தொடர்பாக, முன்னாள் சிறப்பு டிஜிபி  ராஜேஷ் தாஸூக்கு 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து விழுப்புரம் குற்ற வியல் நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.