எஸ்.ஆர்.எம் வள்ளியம்மை பொறியியல் கல்லூரியின் 15 ஆவது பட்டமளிப்பு விழாவில், ஆக்சஞ்சர் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் சாத்தப்பன் நாராயண் 829 மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். இதில் கல்லூரியின் இயக்குனரும், எஸ்.ஆர்.எம் அறிவியல் மற்றும் தொழில்நுட்பநிறுவனத்தின் இணைத் துணை வேந்தருமான முனைவர். தி.பொ.கணேசன், முதல்வர் முனைவர். பா. சிதம்பரராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.